அந்த ஒரு வரிதான் முக்கியம்.. ரபேல் வழக்கில் தனி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜோசப்.. என்ன சொன்னார்?
ரபேல் வழக்கின் மறுசீராய்வு மனுவில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் வழங்கிய தீர்ப்பு அதிக கவனம் ஈர்த்துள்ளது.
டெல்லி: ரபேல் வழக்கின் மறுசீராய்வு மனுவில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் வழங்கிய தீர்ப்பு அதிக கவனம் ஈர்த்துள்ளது. மூன்று நீதிபதிகள் அமர்வில் இவர் தனி தீர்ப்பு வழங்கினார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கின் மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
ரபேல் வழக்கில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை இல்லை, யார் மீதும் எப்ஐஆர் பதிய வேண்டியது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப் ஒரே தீர்ப்பை வழங்கினார்கள்.

ஆனால் தனி
இந்த ரபேல் வழக்கில் நீதிபதி கே எம் ஜோசப் மட்டும் தனி தீர்ப்பை வழங்கினார். அதில், ரபேல் வழக்கில் எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. உரிய ஆதாரங்களுடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

மாற்றமும்
அதேபோல் மற்ற இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கும் சில விஷயங்களையும் நான் ஏற்கிறேன். ஆனால் மனுதாரர்கள் இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆதாரங்கள் இருந்தால் சிபிஐ அமைப்பை அணுகலாம். சிபிஐ விதிப்படி அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். அரசிடம் அனுமதி வாங்கிய பின் அவர்கள் வேண்டுமானால் இதை விசாரிக்கலாம்.

ரபேல் தீர்ப்பு
ரபேல் தீர்ப்பை வைத்து, இதை விசாரிக்கவே கூடாது என்று கூறவில்லை. சிபிஐ ஏதாவது ஆதாரம் கிடைத்தால் அரசிடம் அனுமதி வாங்கி இதை விசாரிக்கலாம். ஆனால் ரபேல் வழக்கில் இதுவரை எங்களிடம் எதுவும் ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பாஜக எதிர்காலம்
இதன் மூலம் ரபேலில் எதிர்காலத்தில் ஆதாரம் கிடைத்தால் சிபிஐ விசாரிக்கலாம். ஆனால் மற்ற இரண்டு நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கவில்லை. இதனால் ரபேல் வழக்கில் பாஜகவிற்கு இனி எதிர்காலத்திலும் எந்த பிரச்சனையும் இருக்காது என்றே கருதப்படுகிறது.

யார் இவர்
நீதிபதி கேஎம் ஜோசப் உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். இவரை உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய மத்திய அரசு எதிர்த்து வந்தது. கொலிஜியம் செய்த பரிந்துரையை மத்திய அரசு இரண்டு முறை நிராகரித்து கடைசியில் ஏற்றுக்கொண்டது. இவர் மத்திய அரசுக்கு எதிரானவர் என்று அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications