'வெறுப்பு பிரசாரத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்..' இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி
டெல்லி: பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியைப் பாராட்டியுள்ள ராகுல் காந்தி, இந்த வெற்றி தொண்டர்களின் வெற்றி என்றும் வெறுப்பு பிரசாரத்தை எதிரான போராட்டம் தொடரும் என்றும் ட்வீட் செய்துள்ளார்
பல்வேறு காரணங்களால் காலியான சட்டசபை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல்களும் நடத்தப்பட்டன.
மொத்தம் 14 மாநிலங்களில் 29 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 மக்களவை தொகுதிகளிலும் கடந்த 30ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இடைத்தேர்தல் முடிவுகள்
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள இம்மாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கு இடைத்தேர்தல் நடந்த 3 சட்டசபை மற்றும் ஒரு மக்களவை என 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக இம்மாச்சல் பிரதேச பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் சொந்த மாவட்டத்தின் அமைந்துள்ள மண்டி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ராகுல் காந்தி
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றியை பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு வெற்றியும் எங்கள் கட்சி தொண்டரின் வெற்றியாகும். வெறுப்பு பிரசாரத்தை எதிர்த்துப் போராடுங்கள். யாருக்கும் அஞ்ச வேண்டாம்!" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். ராகுல் காந்தி மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் தேர்தல் முடிவுகள் குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ரந்தீப் சிங் சுர்ஜேவாலா
பிரதமர் நரேந்திர மோடி தனது ஆணவத்தை விட்டுவிட்டு மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ட்வீட் செய்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசலை அதிக விலைக்கு விற்று பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மக்களின் வலியை அலட்சியம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஹரியானா
ஹரியானாவில் இந்தியத் தேசிய லோக்தள தலைவர் அபய் சவுதாலாவிடம் 6,700 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்தார். சௌதாலா மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் விவசாய சட்டங்களுக்கு எதிராக உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.

பாஜக நிலை
அதேநேரம் வடகிழக்கில் பாஜகவுக்குச் சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. அஸ்ஸாமில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சியான யுனைடெட் பார்ட்டி பீப்பிள்ஸ் லிபரல் கட்சியும் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேகாலயாவில் 2 இடங்களில் பாஜக கூட்டணிக் கட்சி வென்றுள்ளது. அதேநேரம் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிடமும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடமும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
-
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications