கேரளாவில் நாளை முதல் பலத்த மழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்
Recommended Video
டெல்லி: கேரளாவில் நாளை பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழைதான், இந்தியாவின் நீண்ட கால பருவமழையாகும். வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் இந்த மழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஒரு சில முறை செப்டம்பர் மாதத்தை தாண்டியும் தென் மேற்கு பருவ மழை நீடிக்கும்.
மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பெரிய நீராதாரம் இந்த தென் மேற்கு பருவமழைதான். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இருக்கும்.

கைவிரித்த கோடைமழை
கடந்த ஆண்டு நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பருவமழை பெய்யவில்லை. பருவமழைதான் ஏமாற்றியது, கோடை மழையாவது ஓரளவுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோடை மழையும் கைவிரித்துவிட்டது.

கடும் தண்ணீர் தட்டுப்பாடு
இதனால் தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களும் கடும் வறட்சியை சந்தித்து வருகின்றன. குடிநீருக்கே குடத்துடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்தளவு இருப்பு
அனைத்து மாநிலங்களிலும் உள்ள அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் பெரும்பாலும் வறண்டுவிட்டன. ஒரு சில அணைகள் மிகக்குறைந்தளவு நீரை மட்டுமே இருப்பு வைத்து நிலைமையை சமாளித்து வருகின்றன.

தாமதமான பருவமழை
இந்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழையால் தண்ணீர் தட்டுப்பாடும் வெயிலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றாம் தேதி தொடங்க வேண்டிய பருவமழை ஒருவாரம் தாமதமாக நேற்றுதான் தென்னிந்தியாவை அடைந்துள்ளது.

மக்கள் மகிழ்ச்சி
இதனால் கேரளாவின் பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. ஒரு வழியாக மழை தொடங்கியதையடுத்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாளை பலத்த மழை பெய்யும்
இந்நிலையில் வரும் நாட்களில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் கடலோர மாவட்டம் மற்றும் பல பகுதிகளில் நாளை பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications