Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குனோ தேசிய பூங்காவில்.. அடுத்தடுத்து உயிரிழந்த 2 சிவிங்கிப்புலி குட்டிகள்! ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிவிங்கிப்புலி குட்டிகளை பிரதமர் மோடி வளர்ப்புக்காக விட்டிருந்தார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் 2 சிவிங்கிப்புலி குட்டிகள் உயிரிழந்திருக்கின்றன.

ஒரு குட்டி கடந்த வெள்ளிக்கிழமை காட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டது, மற்றொன்று நேற்று கார் மோதி உயிரிழந்தது. இந்த இரண்டு சம்பவங்களும் சிவிங்கிப்புலி திட்டத்திற்கு சவால் விடுத்திருக்கின்றன. குட்டிகள் இறந்ததால், குனோவில் உள்ள மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 27 ஆக குறைந்துள்ளது.

cheetah madhya pradesh

இந்தியாவில் கடைசியாக கடந்த 1947-1950 ஆம் ஆண்டுகளில் சிவிங்கிப்புலிகள் பார்க்கப்பட்டது. அதன் பின்னர் சிவிங்கிப்புலிகள் முற்றிலுமாக அழிந்து விட்டன. இதனையடுத்து இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப்புலியை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு 'சிவிங்கிப்புலி திட்டம்' பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கி புலிகள் கொண்டுவரப்பட்டன. இவை அனைத்தும் குனோ பூங்காவில் விடப்பட்டிருந்தன. இப்படி விடப்பட்ட சிவிங்கிப்புலிகள் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தலைமுறை குட்டிகளை ஈன்றது. இந்த குட்டிகள் வளர்ந்து இரண்டாம் தலைமுறையாக குட்டிகளை ஈன்றது. இந்நிலையில் தற்போது இந்த குட்டிகளில் 2 விபத்திலும், மர்மமான முறையிலும் உயிரிழந்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

குனோ தேசியப் பூங்கா வனத்துறை அதிகாரிகள், உயிரிழந்த சிறுத்தைகளின் சடலங்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். காரால் மோதப்பட்டு உயிரிழந்த சிறுத்தை தொடர்பாக, அதிவேகமாக வந்த வாகனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2022 இல் 'சிறுத்தை திட்டம்' தொடங்கப்பட்ட பிறகு, இந்தியாவில் ஒரு சிறுத்தை வாகனத்தால் கொல்லப்படுவது இதுவே முதல் பதிவு செய்யப்பட்ட நிகழ்வாகும்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, குனோ தேசியப் பூங்காவின் வனத்துறை அதிகாரிகள், தென் ஆப்பிரிக்க சிறுத்தை காமினியின் இரண்டு குட்டிகளை கண்காணித்து வந்தனர். அவை பூங்கா எல்லைக்கு வெளியே சென்றிருந்தன. அன்று காலை 6:30 மணியளவில், குவாலியர் மாவட்டத்தின் காடிகாவ்ன் கிராமத்திற்கு அருகே, ஆக்ரா-மும்பை தேசிய நெடுஞ்சாலை NH-46 ஐ குட்டிகள் கடந்து சென்றதை அதிகாரிகள் கண்டனர். இந்த இடம் குனோ மையப் பகுதியிலிருந்து சுமார் ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ளது.

குனோ தேசியப் பூங்காவின் கள இயக்குநரான உத்தம் குமார் சர்மா இது குறித்து கூறுகையில், "அனைத்தும் திடீரென்று நடந்துவிட்டது. குழு இரண்டு குட்டிகளையும் கண்காணித்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால், திடீரென்று ஒரு கார் அதிவேகமாக வந்து குட்டிகளில் ஒன்றை மோதியது" என்றார். கார் மோதியதில் ஆண் குட்டி உடனடியாக உயிரிழந்தது. மத்தியப் பிரதேச வனத்துறையினர், மற்றொரு குட்டி நலமாக உள்ளது, அது தற்போது தேசிய பூங்காவின் எல்லைக்குள் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+