வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக தாமரை வடிவிலான இனிப்புகள் ஆர்டர்!- காங் புகார்
Recommended Video
டெல்லி: வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக பாஜக தனது வெற்றியை கொண்டாடுவதற்காக கிலோ கணக்கில் இனிப்புகளை ஆர்டர் செய்ததாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் எக்சிட் போலில் பாஜக கூட்டணியே பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக நேற்று மதியம் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக கிரீம் வைத்த கேக், லட்டுக்கள், பெங்காலி ஸ்வீட்டுகள், தாமரை வடிவிலான பர்ஃபிக்கள் 50 கிலோ ஆகியவற்றை பாஜக ஆர்டர் செய்துள்ளதாக தெரிகிறது. ஒரு கிலோ கேக் 900 ரூ முதல் 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பியானோ வாசிக்கும் தீதி.. தேர்தல் முடிவு வரும் நாளில் வைரல் வீடியோ வெளியிட்ட மமதா.. என்ன காரணம் ?
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி பாஜக அலுவலகத்துக்கு வருதை தருவார் என தெரிகிறது. இங்கு தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.
அது போல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஸ்டிக்கர்கள், பேட்ஜ்கள், இந்திரா காந்தி, பிரியங்கா காந்தி முகம் பதித்த சேலைகள் ஆகியன விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.