Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதித்துறை உட்கட்டமைப்பு மோசமாக உள்ளது.. தலைமை நீதிபதி என்.வி. ரமணா கவலை

நீதித்துறையில் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என தலைமை நீதிபதி என்வி ரமணா கேட்டு கொண்டார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீதித்துறை உள்கட்டமைப்பு குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜுவிடம் கவலை தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, வரும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரிலாவது தேசிய நீதித் துறை உள்கட்டமைப்பு ஆணையத்தை ஏற்படுத்த உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டார்..

இந்த விழாவில், தலைமை நீதிபதி என்வி ரமணா கலந்துகொண்டு பேசும்போது, நீதி பெறுவதில் சாமானிய மனிதர்கள் பெரும் தடைகளை சந்தித்து வருவதால், அந்த சிக்கல் உடனே அகற்றப்பட வேண்டும் என்றார்.

 உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு

அத்துடன் நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து பெருத்த கவலையை நீதிபதி ரமணா வெளிப்படுத்தினார்.. அப்போது அவர் பேசும்போது, இன்றைய நீதித்துறை உள்கட்டமைப்பு குறித்து பல கவலைகளை எழுப்பினார்... நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு ஆணையத்தை அமைப்பதற்கான முன்மொழிவை உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சரிடம் ரமணா கேட்டுக் கொண்டார்.

வசதிகள்

வசதிகள்

தொடர்ந்து அவர் சொன்னதாவது: "நீதிமன்ற கட்டமைப்பு என்பது, நீதித்துறையில் மிகவும் முக்கியம்... வழக்குகள் தேங்குவதை தடுக்க, உரிய நீதிமன்றங்கள் இருப்பதுடன், அவற்றில் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டியது அவசியம்.. ஆனால், இந்தியாவில் நீதிமன்றங்களுக்கான நீதித்துறை உள்கட்டமைப்பு எப்பொழுதும் பின்தங்கியே உள்ளது. நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் பாழடைந்த கட்டமைப்புகளுடன் காணப்படுகின்றன.. நீதித்துறையில் திறம்பட செயல்படுவது என்பது மிகக் கடினமாக உள்ளது..

கடினம்

கடினம்


காரணம், இந்தியாவில் நீதித்துறை உள்கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமலேயே உள்ளது.. இந்தியாவில் நீதிமன்றங்கள் இன்னும் பாழடைந்த கட்டமைப்புகளுடன் செயல்படுகின்றன. சில வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் உள்ள 5 சதவீத நீதிமன்ற வளாகங்களில் தான் அடிப்படை மருத்துவ வசதிகள் உள்ளன. 26 சதவீத கோர்ட்களில் பெண்களுக்கு என்று தனி கழிப்பறை வசதி கிடையாது...

 நூலகங்கள்

நூலகங்கள்

அதேபோல, 16 சதவீத நீதிமன்றங்களில், ஆண்களுக்கு கழிப்பறை இல்லை... 50 சதவீத நீதிமன்றங்களில் லைப்ரரிகளும், 46 சதவீத நீதிமன்றங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படவே இல்லை. சுதந்திரத்துக்கு பின், பல்வேறு துறைகளில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன... அதுபோலவே, நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டமைப்புகளை, நவீனப்படுத்த வேண்டியது அவசியம். இந்திய சூழலுக்கு பொருத்தமாக அந்த நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்..

 ஆணையம்

ஆணையம்

இதற்காக, தேசிய நீதித்துறை கட்டமைப்பு வாரியத்தை உருவாக்க வேண்டும்... மத்திய - மாநில அரசுகள் இணைந்து, இதை உருவாக்க வேண்டும்... வரும் குளிர்கால பார்லிமென்ட் தொடரில் தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு ஆணையத்தை கொண்டு வர வேண்டும்.. இது குறித்த திட்டத்தை மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளேன். இதற்கு விரைவில் நேர்மறையான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இது குறித்த நடவடிக்கைகளை அவர் விரைவுபடுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+