Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனா, அமெரிக்கா எல்லாம் ஓரம் போய் விளையாடுங்க! இந்தியா களமிறக்கும் புதிய ஜெட்.. எப்போ தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய விமானப்படைக்காக தயாரிக்கப்பட்ட 'எல்சிஏ மார்க் 1 ஏ' போர் விமானம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய விமானப்படைக்கு அடித்தளம் என்பது ரஷ்ய விமானங்கள்தான். ரஃபேல் விமானங்கள் எல்லாம் இப்போது வந்தவை. இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து தற்போதுவரை இந்திய விமானப்படையை தாங்கி பிடிக்கும் விமானங்கள் என்றால் அது ரஷ்ய படைப்புகள்தான். ஆனால் சோவியத் யூனியன் வீழ்ந்த பின்னர், ரஷ்ய-இந்திய ஆயுத பரிமாற்றத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

LCA Mark 1A aircraft is soon to be inducted into the Indian Air Force

இருப்பினும் இதற்கு முன்னரே உஷாராக இந்தியா 1940ல் தனக்கென ஒரு பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்கியது. ஹெச்ஏஎல் என்பதுதான் அந்த நிறுவனம். இந்நிறுவனம் தற்போது சொந்தமான விமானங்களை உருவாக்க தொடங்கியுள்ளது. அப்படி உருவாக்கப்பட்டதுதான் 'எல்சிஏ மார்க் 1 ஏ' போர் விமானம். இந்த விமானத்தை உருவாக்குவதற்கான திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் முன்வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

முதல்கட்டமாக 83 விமானங்களை உருவாக்க ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முதல் பேட்ச் விமானங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வகை விமானங்கள் ஒற்றை என்ஜின் கொண்டது. 4000 கிலோ எடை கொண்ட இந்த விமானம் அதிகபட்சமாக 130000 கிலோ வரை எடையை எடுத்துக்கொண்டு பறக்க முடியும்.

இந்த விமானங்கள் ஒளியை விட 1.8 மடங்கு வேகத்தில் பயணிக்கும் தன்மை கொண்டதாகும். இந்த விமானத்தின் நோக்கம் மிக் 21, மிக் 23 மற்றும் மிக் 27 ஆகிய விமானங்களுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்றுதான் இது உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதால், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் இந்த திட்டம் பயன்படும்.

இந்திய விமானப்படையில் பல விமானங்கள் இருந்தாலும், எல்சிஏ மார்க் 1 ஏ முக்கிய பங்கு வகிக்கும், குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றிருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விமானம் ஜூலை மாதத்திற்குள் விமான படைக்கு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் என அழைக்கப்படும் தேஜஸ் ஒரு சூப்பர் சோனிக் விமானமாகும். ஒலியை விட வேகமாக பறக்கும் திறன் கொண்ட விமானங்களை சூபர்சோனிக் என்று கூறுவார்கள். 1984ம் ஆண்டு இந்த விமானத்தை உருவாக்கும் பணி தொடங்கியது. இந்த ஆண்டுதான் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியை (ADA) இந்திய அரசு தொடங்கியது. இதற்கு முன்னர் இருந்த மிக் 21 விமானத்தை தொடர்ந்து இது உருவாக்கப்பட்டது.

இலகு ரகத்தில், துல்லியமாக இலக்கை தாக்கிய அழிக்கும் ஆயுதங்களை ஏந்தி செல்லும் வகையில் தேஜஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தில் ஒற்றை இருக்கை கொண்ட விமானங்கள், இரட்டை இருக்கைகள் கொண்ட விமானங்கள் என இரண்டு வகைகள் இருக்கின்றன. பெரும்பாலும் ஒற்றை இருக்கை கொண்ட விமானங்கள் விமானப்படையினராலும், இரட்டை இருக்கை கொண்ட விமானங்கள் கடற்படையினராலும் இயக்கப்படுகிறது.

இது அளவில் சிறியதாக இருப்பதாலும், வெயிட் குறைவு என்பதாலும் எதிரியுடன் மோதும்போது உடனடியான திருப்பங்களை மேற்கொள்ளவும், பதில் தாக்குதல் கொடுக்கவும் இதனை வேகமாக இயக்க முடியும். கடந்த 2016ம் ஆண்டிலிருந்து இந்த விமானங்கள் நமது விமானப்படையில் இருக்கின்றன. தற்போது நம்மிடம் இருக்கும் மிக் 21 ரக விமானங்களை தேஜஸ் விமானங்களாக அப்கிரேட் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+