கொரோனா முன்கள பணியாளர்களுக்கு போதிய அளவு 2வது டோஸ் வேக்சின் போடாதது.. கவலை தருகிறது.. மத்திய அரசு
டெல்லி: மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உட்பட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா வேக்சின் இரண்டாவது டோஸ் போதிய அளவில் போடப்படாமல் இருப்பது பெரும் கவலை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மாற்றி உள்ளது. நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் புதிய வேக்சின் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்தும், வேக்சின் செயல்பாடுகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பாக உயர்மட்ட குழு கூட்டம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் நடத்தப்பட்டது. இந்த மீட்டிங்கிற்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமை தாங்கினார்.
இதில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் பேசுகையில், மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உட்பட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா வேக்சின் இரண்டாவது டோஸ் வேக்சின் வேகமாக போட வேண்டும். இவர்களுக்கு போதிய அளவில் போடப்படாமல் இருப்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.
இவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதன் மூலம் மட்டுமே கொரோனா தடுப்பு பணிகளை முறையாக கவனிக்க முடியும். வேக்சினை மக்களுக்கு செலுத்துவதில் தனியார் நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகளும் வேகமாக வேக்சினை கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்த வேண்டும். மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகள் போதிய அளவில் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை கூறியது.
இதில் மாநில அரசுகள், கோவின் செயலில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர். மக்கள் கொடுக்கும் அடிப்படை தகவல்களை மாற்றும் வசதி, வேக்சின் போடும் தேதிகள், இடங்களில் மாற்றம் ஏற்பட்டால், அதை எளிதாக மாற்றும் வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்தும், ஆன்சைட் பதிவுமுறை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications