அனுமன் சஞ்சீவி கொண்டு வந்தது போல்.. ராமாயணத்தை மேற்கோள்காட்டி மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்
டெல்லி: அனுமன் எப்படி சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து லக்ஷ்மனின் உயிரை காப்பாற்றினாரோ அது போல் இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களின் உயிரை காக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்செனாரோ பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
உலகில் கொரோனா நோயால் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 82 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் தமிழில் உள்ள பழமொழிக்கேற்ப எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதை உலக நாடுகள் தேடி வருகின்றனர்.
இது மிகவும் கொடிய நோய் என்பதால் இதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

மலேரியா நோய்
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்து லைம் லைட்டில் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த மாத்திரை 2ஆம் உலக போரின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் மலேரியா நோய் தாக்கியது. இதையடுத்து அப்போதுதான் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்து இந்தியாவில் அறிகுறிகளற்ற நோய் தாக்கும் அபாயம் கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தடை
இதன் பக்க விளைவுகள் அதிகம் என்பதால் நோயாளிகளுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. எனினும் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த மருந்தை அதிகம் உற்பத்தி செய்யும் இந்தியா, மருந்தின் இருப்பை உறுதிப்படுத்த பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 வகையான மருந்துகளை ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் 25-ம் தேதி தடைவிதித்திருந்தது.

ஏற்றுமதி
அந்த மருந்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் கேட்டுக் கொண்டதற்கிணங்க மருந்து ஏற்றுமதி தடையை தளர்த்துவது குறித்து இந்தியா பரிசீலனை செய்து வந்தது. இதையடுத்து இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கான தடையை தளர்த்தி உள்ளது.

ராமாயணம்
இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ கடிதம் எழுதியுள்ளார். அதில் அனுமன் எப்படி சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து லக்ஷ்மனின் உயிரை காப்பாற்றினாரோ அது போல் இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களின் உயிரை காக்க வேண்டும் என ராமாயணத்தை மேற்கோள்காட்டி கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications