கொரோனா இரண்டாம் அலை : மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Recommended Video

    மீண்டும் Lockdown? தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்.. முழு விவரம் | Oneindia Tamil

    கொரோனா அதிகம் பரவி வரும் 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை செய்ய உள்ளார். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கு மிகமிக தீவிரமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்றும் கொரோனா தொற்று காரணமாக ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

    தமிழகம் உள்பட

    தமிழகம் உள்பட

    இப்படி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருவதால், பொது இடங்களில் கொரோனாவைப் பரவாமல் தடுக்க கடுமையான நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்தும்படி அப்போது மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கேரளா, டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தரப்பிரேதசம், கர்நாடகா, குஜராத் மற்றும் பஞ்சாப் உள்பட 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

    கட்டுப்பாடுகள் வரலாம்

    கட்டுப்பாடுகள் வரலாம்

    பிரதமர் மோடியின் இந்த ஆலோசனைக்குப் பிறகு பல்வேறு முக்கிய ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதனிடையே மீண்டும் முழு ஊரடங்கு வரலாம் என்ற அச்சம் மகாராஷ்ரா மாநிலத்தில் நிலவுகிறது. இதேபோல் சத்தீஸ்கர் மற்றும் குஜராத் மாநிலத்திலும் காணப்படுகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முன்கூட்டிய ரயில்களில் ஏறி ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்,

    ஐந்து மாநிலங்கள்

    ஐந்து மாநிலங்கள்

    இதனிடையே டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள் இரவு 8 மணியளவில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் டெல்லி, சண்டிகர், அகமதாபாத், மும்பை, புனே, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேர வாழ்க்கை முடங்கி விட்டது.

    அடுத்த 4 வாரங்கள்

    அடுத்த 4 வாரங்கள்

    இரவில் நடமாடும் வாகனங்களை போலீசார் தடுத்து வழக்கு போடுகிறார்கள். பொது இடங்களில் முக்ககவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. திருமண விழாக்கள், பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .என்றும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+