அட.. குழந்தைக்கு பெயர் ‘மன் கி பாத்’! நிகழ்ச்சியின்போதே பிரசவ வலியில் துடித்த பூனம் தேவி.. யார் இவர்
டெல்லி : பிரதமர் மோடியின் மன் கி பாத் 100வது உரையையொட்டி டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பங்கேற்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், அந்தக் குழந்தைக்கு 'மன் கி பாத்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' என்னும் தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மன் கி பாத் உரையில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், சமூக சேவகர்கள், விருது பெற்றவர்கள், சாதனையாளர்கள் குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இதுவரை 99 உரைகள் முடிவடைந்த நிலையில் இன்று மன்கி பாத் நிகழ்ச்சியின் நூறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

மன் கி பாத் 100 : இதற்கிடையே இதனை கொண்டாடும் விதமாக டெல்லியில் தேசிய மாநாடு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடந்தகாலத்தில் மன் கி பாத் உரைகளில் பிரதமர் மோடி பாராட்டிய பெண்களில் 100 பேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டர். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் தொடங்கி வைத்தார்.
மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட 100 பெண்களில் உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்த பூனம் தேவி என்பவரும் ஒருவர்.
பூனம் தேவி : சுய உதவிக்குழு மூலமாக வாழைத்தண்டு நார் மூலம் கைப்பை போன்ற பொருட்களை தயாரித்து கூடுதல் வருமானம் ஈட்டும் பூனம் தேவியை மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். இந்நிலையில் மன்கி பாத் 100வது எபிஸோட் நிகழ்வை கொண்டாடும் வகையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த நிறைமாத கர்ப்பிணியான பூனம் தேவிக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பூனம் தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையை பெற்றெடுத்த பூனம் தேவிக்கு அமைச்சர் அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்தார். பூனம் தேவிக்கு பிறந்த குழந்தைக்கு 'மன் கி பாத்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications