இவ்வளவு தான் தயாரிச்சதே.. தொடர்ந்து 8வது மாதமாக கார் உற்பத்தியை குறைத்த மாருதி சுசுகி
Recommended Video
டெல்லி: நாட்டில் வாகனங்களின் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் வாகன தயாரிப்பு நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தொடந்து 8வது மாதமாக செப்டம்பர் மாதத்தில் வாகன உற்பத்தியை 17.48 சதவீதம் அளவுக்கு குறைத்து உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் கார் உற்பத்தியை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு காட்டிலும் 17.37 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
2018 செப்டம்பரில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 659 என்ற அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்ட மாருதி சுசுகி நிறுவனத்தின் பயணிகள் கார்கள், கடந்த செப்டரில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 264 என்ற அளவுக்கும் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தி சரிவு
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 576 என்ற அளவில் சிறிய ரக கார்களான ஆல்டோ, செலரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலேனோ, வேகன் ஆர், டிசையர் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதே சிறிய ரக கார்களின் உற்பத்தி 98 ஆயிரத்து 337 ஆக குறைந்து உள்ளது.

விடாரா ப்ரீசா- எர்டிகா
அதே போல் பெரிய ரக கார்களான விடாரா ப்ரீசா, எர்டிகா மற்றும் எஸ்- கிராஸ் மாடல் கார்களின் உற்பத்தியும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும் போத 17.05 சதவீதம் குறைந்து உள்ளது.

நடுத்தர கார்கள்
நடுத்தர அளவுடைய சிடன் சியஸ் உள்ளிட்ட கார்களோ கடந்த ஆண்டு செப்டம்பரில் 4 ஆயிரத்து 739 என்ற அளவில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பரில் 2 ஆயிரத்து 350 என்ற அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.

கார் தயாரிப்பு பாதிப்பு
ஒட்டுமொத்தமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் அனைத்து ரக வாகனங்களின் உற்பத்தியும், 17.48 சதவீதம் அளவுக்கு செப்டம்பரில் குறைந்துள்ளது. மாருதி சுசுகி மட்டுமல்ல டாட்டா மோட்டார்ஸ், மகிந்திரா, ஹூண்டாய், டொயோட்டா, ஹோண்டா என அனைத்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார் உற்பத்தியும் கடுமையாக சரிந்துள்ளது.












Click it and Unblock the Notifications