வார்த்தையை விட்ட மார்க் ஜூக்கர்பெர்க்..வரிந்து கட்டிய பாஜக அரசு! தெரியாம சொல்லிட்டாரு..பணிந்த மெட்டா
டெல்லி: கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு ஏற்பட்ட சூழல்களை சமாளிக்க முடியாமல் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் ஆளும் கட்சிகள் தோல்வியை சந்தித்தன, இந்தியாவில் ஆளும் கட்சி தோல்வி அடைந்ததாக மெட்டா உரிமையாளரான மார்க் ஜூக்கர்பெர்க் கூறிய கருத்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது மெட்டா.
உலக அளவில் மிகப் பிரபலமான தொழிலதிபர்களின் ஒருவர் மார்க் ஜூக்கர்பெர்க் கல்லூரியில் படிக்கும் போது அவர் தொடங்கிய பேஸ்புக் இன்று உலக அளவில் மிக பிரபலமான சமூக வலைத்தளமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவின் உரிமையாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களாக மார்க் ஜூக்கர்பெர்க் தொடர்பாக சர்ச்சை வெடித்து இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மார்க் ஜூக்கர்பெர்க்," கடந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருந்தது. இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்றது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆளுங்கட்சி தோல்வியை சந்தித்தது" என்றார்.
இந்தியாவில் ஆளுங்கட்சி தோல்வியடைஞ்சதாக அவர் கூறியது கடும் கண்டனங்களை பெற்றது. பாஜக 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்ததாக மார்க் கூறியதற்கு கடும் கண்டனம் பாஜக தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசி இருந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்," 2024 தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்தனர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி மீது மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தி வெற்றி தந்தனர். ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆட்சியில் இருந்த அரசுகள் தோல்வி அடைந்ததாக மார்க் ஜூக்கர்பெர்க் கூறியது சரியான கருத்து இல்லை. கொரோனா காலத்தில் 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவும், இரண்டு பில்லியன் இலவச தடுப்பூசிகளும் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு சாட்சி" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகற்பெர்க் விவகாரத்தை நாடாளுமன்ற குழு கையில் எடுத்தது இது தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்பதாக மெட்டா கூறியுள்ளது.
"2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின் உலகின் பல நாடுகளிலும் மக்களிடையே அதிருப்தியைப் பெற்ற ஆளும் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் பல, தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற முடியவில்லை என மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டதில் இந்தியா என்பது மட்டும் விதிவிலக்காக அமைந்துவிட்டது. மார்க் ஜூக்கர்பெர்க் எவ்வித உள்நோக்கமின்றி எதேட்சையாகப் பேசி விட்டதாக மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத் தலைவரான ஷிவ்நாத் துக்ரல் கூறியுள்ளார். மார்க் ஜூக்கர்பெர்க் பேச்சு தொடர்பாக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதாக பாஜக எம்பி ஆன நிஷிகாந்த் டுபே தெரிவித்திருக்கிறார்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications