மேகாலயா, மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத்தில் நிலநடுக்கம்- இந்தியாவை அச்சுறுத்தும் நில அதிர்வுகள்!
மேகாலயா, மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
மேகாலயா, மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத்தில் நிலநடுக்கம்- இந்தியாவை அச்சுறுத்தும் நில அதிர்வுகள்!
டெல்லி: மேகாலயா, மகாராஷ்டிரா மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. ராஜ்கோட்டில் நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி இருந்தது.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இரு நாடுகளையும் உருக்குலைத்துள்ளது. துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000-த்தை தாண்டிவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பெருந்துயரத்தில் சிக்கி உள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவுக்கு சர்வதேசத்தின் உதவிக் கரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் துருக்கி, சிரியாவை தொடர்ந்து உலகின் பல நாடுகளை நிலநடுக்க அதிர்வுகள் அச்சுறுத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருவது பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 4 நாட்களில் இன்று 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட நில அதிர்வுகளின் பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானை தொடர்ந்து பப்புவா நியூ கினியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ரிக்டரில் 6.2 அலகுகள் பதிவாகின. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
முன்னதாக இந்தோனேசியா, ஜப்பான் நாடுகளிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதிரவைத்தது. ஜப்பானின் வடக்கே நெமுரா தீபகற்ப பகுதியில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 அலகுகளாகப் பதிவானது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவானது. அங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. பிரிட்டனின் சில பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று இந்தியாவில் மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேகாலயா மாநிலத்தின் துரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆகவும் மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் அதிரவைத்த நிலநடுக்கமானது3.6 அலகுகளாகவும் பதிவாகின. மேகாலயா மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் இந்த நிலநடுக்கம் பொதுமக்ளை அச்சப்படவைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் மேகாலயா மாநிலத்தில் நில நடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. மேகாலயா மாநிலமானது வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இதனால் வங்கதேச எல்லைப் பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகாலயா, மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. ராஜ்கோட்டில் ரிக்டரில் 4.3 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. குஜராத்தின் கட்ச் பிராந்தியம் மிகப் பெரிய நிலநடுக்கப் பேரழிவை 2001-ல் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
100 வீடியோக்கள்.. சிக்கும் விஐபிக்கள்.. போலி சாமியாரின் கோவிலுக்கு 1 கோடி அரசு ஒதுக்கியது அம்பலம் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications