பியூஷ் கோயலை சந்தித்த தங்கமணி.. நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை
டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்தித்து, தமிழகத்திற்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ராஜ்யசபாவில் இன்று சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடு முழுக்க பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், டெல்லியில் இன்று தமிழக அமைச்சர் தங்கமணியை சந்திக்க கால அவகாசம் கொடுத்திருந்தார் பியூஷ் கோயல்.
அப்போது அவரிடம், தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக தங்கமணி கோரிக்கைவிடுத்தார். இதற்கு பியூஷ் கோயல் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
வேலூரில் இன்று லோக்சபா தேர்தல் நிறைவடைந்த நிலையில், அரசியல் தொடர்பாக இரு தலைவர்களும் பேசிக் கொண்டனரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
English summary
Minister Thangamani met with Union Minister Piyush Goyal in Delhi and consulted on coal allocation to Tamil Nadu.
Story first published: Monday, August 5, 2019, 21:49 [IST]