71 புதிய அமைச்சர்கள்! யார் யாருக்கு எந்த துறைகள்? மோடி 3.O கேபினட்டின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது
டெல்லி: இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் இல்லத்தில் புதிய அமைச்சரவையின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் யாருக்கு எந்த துறைகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணி வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை பாஜகவால் பெற முடியாததால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட தனது கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை பாஜக அமைத்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 இடங்கள் உள்ளதால் ஆட்சி அமைக்க மோடி உரிமை கோரினார். இதையடுத்து, ஜனாதிபதி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். தொடர்ந்து நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார்.
மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என 71 பேர் பதவியேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நேற்று மாலை 7.15 மணியளவில் தொடங்கிய பதவியேற்பு விழா இரவு 10 மணி வரை பெற்றது. பதவியேற்பு விழா முடிந்ததும், புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
அதில், புதிய அமைச்சரவை இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டதாக உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்காக எந்த ஒரு வாய்ப்பையும் நாங்கள் விடாமல் பணியாற்றுவோம் என்றும் கூறினார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில்,தான், இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் இல்லத்தில் புதிய அமைச்சரவையின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் யாருக்கு எந்த துறைகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்கள் தங்கள் சொத்து பட்டியலை சமர்பிக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
-
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார்












Click it and Unblock the Notifications