பிரதமராக யார் வர விருப்பம்?.. மேற்கு வங்க மக்களின் சாய்ஸ் இவர்தான்.. பரபர சர்வே முடிவுகள்
டெல்லி: பிரதமராக யார் வர விருப்பம் என மேற்கு வங்க மக்களிடம் கேட்டபோது அவர்களின் முதல் சாய்ஸ் நரேந்திர மோடிதான் என நியூஸ் நேஷன் சர்வே தெரிவித்துள்ளது.
அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் மேற்கு வங்கம் 3-ஆவது இடம் பிடித்துள்ளால் முக்கிய மாநிலமாகும். இதனால் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் நியூஸ் சர்வே மக்களின் கருத்துகளை கேட்டது.

அதில் பிரதமராக யார் பதவி வகிக்க விருப்பம் என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பாஜகவின் நரேந்திரமோடியே வரும் தேர்தலிலும் பிரதமராக வர வேண்டும் என 31 சதவீதம் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அது போல் பிரதமர் ரேஸில் இரண்டாவது இடத்தில் உள்ள ராகுல்காந்திக்கு 17 சதவீதம் பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த இருவர் அல்லாது மற்றவர்கள் பிரதமராக வர 29 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் முக்கியமான விவகாரங்கள் என்னென்ன என மக்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அடிப்படை உள்கட்டமைப்பு என 19 சதவீதம் பேரும், வேலையின்மை என 17 சதவீதம் பேரும், பணவீக்கம் என 12 சதவீதம் பேரும், நக்ஸலிசம் என 11 சதவீதம் பேரும், ஊழல் என 9 சதவீதம் பேரும், சட்டவிரோத ஊடுருவுபவர்கள் என 7 சதவீதம் பேரும், நிலையான அரசு என 5 சதவீதம் பேரும் கம்யூனலிசம் என 4 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
42 மக்களவை தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றி பெறும். பாஜகவோ 7 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் இடது சாரிகள் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications