டெல்லியில் 100 பள்ளிகள் மூடல்.. இ-மெயில் வெடிகுண்டு மிரட்டலால் பாதியில் வீட்டுக்கு சென்ற மாணவர்கள்
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் டெல்லியில் உள்ள 100 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் பாதியில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சமீபகாலமாக பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பெங்களூர் மற்றும் சென்னையில் உள்ள ஏராளமான பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தான் இன்று டெல்லி மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது டெல்லியில் உள்ள 100 பள்ளிகள் மற்றும் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பள்ளிகளுக்கும் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காலை 6 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இ-மெயிலை பள்ளி தொடங்கியபோது ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பள்ளி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு உள்பட வெடிக்கும் தன்மையுடைய எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதன்மூலம் இ-மெயிலில் வந்த மிரட்டல் என்பது வெறும் வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது.
அதேபோல் நொய்டாவில் உள்ள பள்ளிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கும் வெடிகுண்டு இல்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதாவது இமெயில் வந்த ஐபி முகவரியை வைத்து விசாரணையை தொடங்கி உள்ளன. மேலும் இந்தியாவுக்கு வெளியே உள்ள பகுதியில் அதாவது வெளிநாட்டில் இருந்தபடி மிரட்டல் மெயில் அனுப்பி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுபற்றி டெல்லி போலீசார் கூறுகையில், ‛‛திவார்கா, வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி, கிழக்கு மயூர் விஹாரில் உள்ள அனை் மேரி பள்ளி, சமஸ்கிருத பள்ளி, புஷ்ப் விகாரில் உள்ள அமிட்டி பள்ளி, தென்மேற்கு டெல்லியில் உள்ள டிஏபி பள்ளி உள்பட பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நொய்டாவில் உள்ள பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபரை தேடிவருகிறோம்'' என்றனர்.
இந்த சம்பவம் இன்று டெல்லி மற்றும் நொய்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக பாதுகாப்ப கருதி மாணவ-மாணவிகள் உடனடியாக 100 பள்ளிகளில் இருந்து தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications