நாவடக்கம் வேண்டும்.. பேச்சில் நாகரீகத்தை கடைபிடியுங்கள்.. பாஜக தலைவர்களுக்கு ஆர்எஸ்எஸ் கண்டிப்பு
டெல்லி: பாஜக தலைவர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டித்துள்ளது. பேசும் மொழியிலும் நாகரீகத்தை நாம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோரின் பேச்சுகள் டெல்லியில் நடந்த வன்முறை விவகாரத்திற்கு காரணமாக அமைந்ததாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

டெல்லி உயர் நீதிமன்றம் பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகீயோர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பெரும் சர்ச்சைக்கு பின் இவர்களின் கருத்துக்கள் பாஜகவின் கருத்துக்கள் அல்ல. இது அவர்களின் சொந்த கருத்துக்கள், இத்தகைய கருத்துக்ககளை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் அயோத்தி எம்பி லல்லு சிங், அயோத்தி பார்வ் என்ற கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் இணை பொது செயலாளர் தாட்டட்ரேயோ ஹோஷபலே கலந்து கொண்டு உரையாற்றினார். இரண்டாவது நாள் கூட்டத்தில் நேற்று அவர் உரையாற்றுகையில் சர்ச்சை பேச்சுக்காக பாஜக தலைவர்களை கண்டித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், உலகம் முழுவதும் ராமருக்கு வணங்குகிறது, ஆனால் அவரது சொந்த நாட்டில் உள்ள பக்தர்கள் கோயிலின் கட்டுமானத்தைத் தொடங்க அரசாங்க உத்தரவுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில் நாம் அடக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் ... இது ராமர் நமக்கும் அளிக்கும் செய்தியும் கூட. ராம் பகவான் "மரியாதை புருஷோத்தம்" என்று நினைவுகூரப்படுகிறார், ஏனெனில் அவர் பயன்படுத்திய மொழியில் கூட அடக்கத்தைக் கடைப்பிடித்தார். இன்றைய சூழலில் ராமர் நமக்கும் அளித்த செய்தி என்னவென்றால், ஒருவர் மனதில் தோற்றுவதை எல்லாம் பேசக்கூடாது ... மாறாக அவர் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.
-
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
எடப்பாடி பழனிசாமி பட்ட பாடெல்லாம் போச்சா? தவெக மூலம் தொங்கு சட்டசபை? கிங் மேக்கர் ஆக துடிக்கும் பாஜக -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம்












Click it and Unblock the Notifications