நாகேஸ்வர ராவ் வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டின் ஒரே தீர்ப்பு.. இத்தனை பெரிய பின் விளைவுகளா!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிராக தீர்ப்பு வந்த காரணத்தால், சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் இனி எந்த விதமான பணி உயர்வுகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிராக தீர்ப்பு வந்த காரணத்தால், சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் இனி எந்த விதமான பணி உயர்வுகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
முசாபர் நகர் குழந்தைகள் காப்பக பாலியல் வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் பணியிட மாற்றம் செய்தார். இதனால் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாகேஸ்வர ராவ் தண்டிக்கப்பட்டுள்ளார்.
நாகேஸ்வர ராவ் செய்தது தவறுதான் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் பல முக்கிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்து இருக்கிறது.

என்ன அவமதிப்பு
நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது தொடர்பான வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவிற்கு சுப்ரீம் கோர் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதேபோல் இன்றுமாலை வரை அவர் உச்ச நீதிமன்றத்தில் அலுவலகத்திற்குள் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணியிட மாற்றம்
அதேபோல் இவர் பணியிட மாற்றம் செய்த சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை மீண்டும் பீகார் வழக்கை விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உடனே இதற்கான பணியாணையை பெற்று, சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை உடனே பணியை தொடங்கும்படி நீதிமன்றம் கூறியுள்ளது..

இனி முடியாது
இந்த நடவடிக்கை காரணமாக நாகேஸ்வர ராவ் இனி எந்த விதமான பணி, பதவி உயர்வுகளும் பெற முடியாது. நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர் என்பதால் மத்திய அரசு இவருக்கு இனி பணி உயர்வு வழங்க முடியாது. பணிக்காலம் முடியும் வரை இவர் இதே ரேங்கில் பணியாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

மிக மோசம்
இது இரண்டு விதங்களில் பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதன்படி ஏகே சர்மா முசாபர்நகர் காப்பக வழக்கில் பாஜகவினர் மீது வழக்கு தொடரும் முடிவில் இருக்கிறார். அவர் மீண்டும் வழக்கை எடுத்து இருப்பது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாகும். அதேபோல் பிரதமர் மோடிக்கு நெருக்கமான நாகேஸ்வர ராவ் இனி பணி உயர்வு பெற முடியாததும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications