அதிமுக படுதோல்வி அடையும்.. இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்! ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் புகழேந்தி புதிய மனுவை அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சுமார் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Need to block two leaves symbols OPS side new petition to Election Commission

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி. தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை தங்களுக்குத் தான் கிடைக்கும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இருப்பினும், சமீபத்தில் இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று ஓபிஎஸுக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இது ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக அமைந்தது.

இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புதிய கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தி அதிமுக படுதோல்வி அடைவதைத் தொண்டர்கள் விரும்பவில்லை என்ற அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+