தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை மாற்றுங்கள்... லோக்சபாவில் திமுக எம்.பிக்கள் முழக்கம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி லோக்சபாவில் திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். தமிழக ஆளுநர் ரவி சட்டத்தை மதிக்காமல் காட்டாட்சி நடத்துவதாகவும் எம்.பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் லோக்சபாவில் முழக்கமிட்டனர். ஆளுநர் ரவி சட்டப்படி செயல்பட வேண்டும் எனவும் திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத்தலைவருக்கு அதனை அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டார் ஆளுநர்.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு
இதனையடுத்து தமிழக ஆளுநரை நீக்கவேண்டும் என்று தமிழக எம்.பி.க்களும். எம்.எல்.ஏ.க்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி சிறப்பு சட்டசபைக் கூட்டம் கூட்டப்பட்டு நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மு.க ஸ்டாலின்
சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசியல் சாசனத்தின் படி மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்று கூறினார், மீண்டும் நிறைவேற்றப்படும் நீட் விலக்கு மசோதாவை காலம் தாழ்த்தாமல் குடியரசுத்தலைவருக்கு அனுப்புவார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் கிடப்பில் போட்ட ஆளுநர்
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா ஆளுநருக்ககு அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதங்களுக்கு மேலான நிலையில் அவர் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு இன்னமும் அனுப்பி வைக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் லோக்சபாவில் இன்று திமுக எம்பிக்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மாற்றவேண்டும் என்று லோக்சபாவில் முழக்கமிட்டனர்.

டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு
லோக்சபாவில் பேசிய எம்பி டி.ஆர்.பாலு, 'ஆளுநரின் செயல்பாடுகள் முறையாக இல்லை. நீட் தேர்வு விலக்கு மசோதா மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆர்ட்டிகள் 200, 201ன் படி குடியரசுத்தலைவருக்கு தீர்மானத்தை அனுப்ப வேண்டும். ஆனால், ஆளுநர் அதை செய்யவில்லை என குற்றம்சாட்டினார். ஆளுநர் ரவி சட்டத்தை மதிக்காமல் காட்டாட்சி நடத்துவதாகவும். திமுக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications