நாட்டில் கொரோனா பாதிப்பு 60,471ஆக குறைந்தது...1,17,525 பேர் மீண்டனர் - 9,13,378 பேருக்கு சிகிச்சை
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,95,70,881 பேராக உயர்ந்துள்ளது.
கடந்த மாதத்தில் 4 லட்சத்திற்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 80 ஆயிரம், நேற்று 70 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று 60 ஆயிரமாக குறைந்துள்ளது.
தொடர்ச்சியாக 8 நாட்களாக பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டிலேயே தமிழ்நாட்டில் அதிக கொரோனா கேஸ்கள்.. மகாராஷ்டிராவிற்கு 2வது இடம்
75 நாட்களுக்குப் பின் பாதிப்பு குறைவு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 60,471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,95,70,881 பேராக அதிகரித்துள்ளது.
2,82,80,472 குணமடைந்தனர்
கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,17,525 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,82,80,472 பேராக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 95.64 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
9,13,378 பேர் சிகிச்சை
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கையை அதிகரித்து வருகிறது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9,13,378 பேராக குறைந்துள்ளது.
3,77,031 பேர் மரணம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 2726 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,77,031 பேராக அதிகரித்துள்ளது.
பேருக்கு தடுப்பூசி
நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 25,90,44,072 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 39 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.