Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையை அதிர வைத்த கார் சிலிண்டர் வெடிப்பு.. ஐஎஸ்-க்கு ஆள் சேர்த்த ஜமீல் பாஷா! அதிரடி காட்டிய என்ஐஏ.!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஜமீல் பாஷா, அப்துல் ரகுமான் ஆகிய நான்கு பேர் மீது இந்த நடவடிக்கை என்.ஐ.ஏ.வால் எடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த நிகழ்வு தமிழகம் தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

NIA ISIS Coimbatore car cylinder blast

இதையடுத்து சம்பவ இடத்திற்கே நேரில் சென்று ஆய்வு செய்த அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு கோவை மக்கள் பதற்றப்பட தேவையில்லை என நம்பிக்கையூட்டினார். அதுமட்டுமல்ல கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தமிழக அரசு பரிந்துரையும் செய்தது.

அதனடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஐமோஷா முபின் என்பவர் காரில் குண்டை வெடிக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இதுவரை 15 பேரை கைது செய்தனர். மேலும் ஐமோஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து தாகா நசீர் என்பவர் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஜமீல் பாஷா, அப்துல் ரகுமான் ஆகிய நான்கு பேர் மீது இந்த நடவடிக்கை என்.ஐ.ஏ.வால் எடுக்கப்பட்டிருக்கிறது. ஜமீல் பாஷா, முகமது உசேன், அப்துல் ரகுமான் மற்றும் இர்சாத் ஆகிய நான்கு பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் ஏற்கனவே சேர்ந்திருந்த இவர்கள் அரபி வகுப்புகள் நடத்துவது போல மாணவர்களை வரவழைத்து மூளை சலவை செய்து ஐஎஸ் அமைப்பிற்கு சேர்த்துள்ளனர். இந்த திட்டத்திற்கு முக்கிய நபராக செயல்பட்டது ஜமீல் பாஷா என்பது தெரியவந்தது.

இவர் அரபி வகுப்புகள் நடத்துவதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி அமைப்புகளை ஆரம்பித்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்து வந்துள்ளார். இது மட்டுமல்லாமல் கோவையில் இர்ஷாத் மற்றும் முகமது ஹுசைனை அரபி வகுப்பு என்ற பெயரில் ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் அல்லாமல் youtube, facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரசங்கம் நடத்துவதாகவும், அதன் மூலம் தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக என்ஐஏ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+