நிர்பயா வழக்கு.. நாளை நான்கு பேரும் தூக்கிலிடப்பட மாட்டார்கள்... டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
டெல்லி: நிர்பயா வழக்கில் நாளை நான்கு பேரும் தூக்கிலடப்பட மாட்டார்கள், ஏனெனில் டெல்லி ஹைகோர்ட் நான்கு பேரையும் நாளை தூக்கிலிட தடை விதித்துள்ளது.
டெல்லியில் துணை மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கடுமையாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை நாளை அதாவது மார்ச் 3ம் த் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கில வேண்டும் என்று கடந்த 17ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீராய்வு மனு
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குற்றவாளி பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்தார். அத்துடன் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த மரண தண்டனை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பவன் மனு தள்ளுபடி
இந்நிலையில் இன்று பவன் குப்தாவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்வி ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்எப் நாரிமன், ஆர் பானுமதி, அசோக் பூஷன் ஆகோயர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நிர்பயா வழக்கில் உள்ள நான்கு குற்றவாளிகளில் 25 வயதான பவன் குப்தா மட்டுமே இதுவரை சட்டரீதியான விருப்பங்களை தீர்த்துக் கொள்ளாமல் இருந்தார்

ஜனாதிபதி நிராகரிப்பு
இந்நிலையில் அவரம் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு கருணை மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை குடியரசுத் தலைவர் இன்று உடனடியாக நிராகரித்தார்.. முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா மற்றும் அக்ஷய் குமார் ஆகிய மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தள்ளிப்போகுமா
இதேபோல் அக்ஷய் குமாரின் இரண்டாவது கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்துள்ளார் . அக்சய் குமார், பவன்குமார் ஆகிய இருவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை போல், இவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதுக்கும் தடை விதிக்க டெல்லி பட்டியாலா மறுத்துள்ளது. எனவே நாளை காலை 6மணிக்கு திகார் சிறையில் முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை காலை 4 பேரையும் தூக்கிலட கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications