கல்விக்கு முக்கியத்துவம்...மத்திய பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்
டெல்லி : மத்திய பட்ஜெட்டில் 15,000 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளில், தேசிய கல்விக் கொள்கையின்படி 15,000 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். தனியார், அரசு சாரா அமைப்புக்களின் பங்களிப்புடன் புதிதாக 100 சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும்.

லடாக்கில் உயர் கல்வி மையம் மற்றும் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மலைவாழ் பகுதியில் 750 ஏகலைவன் மாடல் பள்ளிகள் அமைக்கப்படும். இதற்காக ஒதுக்கப்படும் நிதி ரூ.20 கோடியில் இருந்து ரூ.38 கோடியாக உயர்த்தப்படுகிறது. விரைவில் லே பகுதியில் பல்கலைகழகம் அமைக்கப்படும்.
ஆரம்ப மற்றும் உயர் கல்விக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.99,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 4.96 சதவீதம் அதிகம் ஆகும். மலைப்பிரதேச பள்ளிகளின் வளர்ச்சிக்காக ரூ.48 கோடி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications