4 ஆண்டுகளில் இது தான் கம்மி! வெறும் 90 நிமிடங்களில் முடிந்த இந்த ஆண்டிற்கான பட்ஜெட் உரை
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 4ஆவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்தியாவில் கடந்த 2017 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலை மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் காகிதமில்லாத முறையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்கள்
கடந்த 2019 ஆம் ஆண்டில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2019-20 நிதியாண்டிற்கான அந்த பட்ஜெட் உரை அதிக 2 மணி நேரம் 17 நிமிடங்கள் இருந்தது. இதன் மூலம் மிக நீண்ட நேரம் பட்ஜெட் உரையை வாசித்த அமைச்சர் என்ற சாதனையைப் படைத்தார். அடுத்த ஆண்டு, 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்து தனது சாதனையைத் தானே முறியடித்தார். அதுவும் கூட முழு பட்ஜெட் உரை முடியவில்லை. அப்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் கடைசி இரண்டு பக்கங்களை வாசிக்கவில்லை.

90 நிமிடங்கள்
நிர்மலா சீதாராமன் 2022ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தார். இன்றைய தினம் அவரது பட்ஜெட் உரை மொத்தமே ஒன்றரை மணி நேரம் மட்டுமே இருந்தது. நிர்மலா சீதாராமன் இதுவரை நான்கு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட் தான் குறுகியது. முன்னதாக, கடந்த 2021இல், அவரது பட்ஜெட் உரை 100 நிமிடங்கள் இருந்தது. சராசரியாக, ஒரு பட்ஜெட் உரை 90 முதல் 120 நிமிடங்கள் வரை இருக்கும்.

நீண்ட பட்ஜெட் உரை
நிர்மலா சீதாராமனுக்கு முன், ஜஸ்வந்த் சிங்கின் பட்ஜெட் தான் மிக நீண்ட பட்ஜெட் உரை என்ற சாதனையை வைத்திருந்தது. கடந்த 2003ல் அவர் 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதேபோல சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகக் குறுகிய பட்ஜெட் உரையை ஹிருபாய் எம் படேல் 1977இல் ஆற்றினார். அந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட் வெறும் 800 வார்த்தைகள் மட்டுமே இருந்தது.
Recommended Video

வேகமாக வளரும் பொருளாதாரம்
'உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்' என்பதைக் குறிக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 7.3% குறைந்த நிலையில், வரும் மார்ச் மாதத்துடன் முடியும் இந்த நிதியாண்டு 9.2%ஆக உயரும் எனக் கூறப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சில நாட்களில் வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், இந்த பட்ஜெட் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications