பேஷ் பேஷ்.. நிர்மலா சீதாராமனின் மாஸ்க்கை கவனிச்சீங்களா.. சுயசார்பை செயலில் காட்டி அசத்தல்!
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துணியினாலான முகக் கவசத்தை அணிந்துள்ளது தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் திட்டம் குறித்து பேசுவதற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.
Recommended Video
கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் தற்போது மே 17 ஆம் தேதி வரை முழு முடக்கம் அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் உரையாற்றினார்.
அப்போது அவர் தற்சார்புள்ள இந்தியா குறித்து விளக்கினார். ஒரு தலைகீழ் மாற்றம் தேவை என்றார். மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.

செய்தியாளர்கள்
இந்த திட்டம் குறித்து விரிவாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் முகத்தில் கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் துணியிலாலான மாஸ்கை அணிந்திருந்தார். கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கிய காலத்தில் சீனா ஏராளமான மாஸ்க்குளையும் பாதுகாப்பு உபகரணங்களையும் பதுக்கி வைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செயல்முறை விளக்கம்
இதனால் இந்தியாவில் மாஸ்க்குகளுக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது. அப்போது துணியிலாலான முகக் கவசங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த மாஸ்க்கை எப்படி தயார் செய்வது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர்.

மாஸ்க்
அதன் பின்னர் நாட்டு மக்களுடன் உரையாற்றிய போதெல்லாம் துணியினாலான மாஸ்க்குகளையே பிரதமர் பயன்படுத்தி வந்தார். அது போல் இன்று சுயசார்பு இந்தியா திட்டம் குறித்து பேச வந்த நிர்மலா சீதாராமனும் துணியினாலான மாஸ்கை அணிந்திருந்தது மிகவும் பொருத்தமாக இருந்தது.

சிவப்பு பை
இது போல் கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது வழக்கமாக சூட்கேஸில் அறிக்கை நகல்களை கொண்டு வராமல் சிவப்பு பையில் கொண்டு வந்தார். அந்த பையை தனது தாய் தைத்து கொடுத்ததாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications