புதிய மோட்டார் வாகன சட்டம்.. மாநில அரசே முடிவெடுக்கலாம்.. இறங்கி வந்த நிதின் கட்கரி!
புதிய மோட்டார் வாகன சட்டம் மூலம் எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் என்பது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லி: புதிய மோட்டார் வாகன சட்டம் மூலம் எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் என்பது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதிய மோட்டார் வாகனச்சட்டம் மக்கள் இடையே பெரிய எதிர்ப்பை சந்தித்து உள்ளது. மோட்டார் வாகனச்சட்டம் மூலம் அதிக அளவு அபராதம் விதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக தினமும் அதிர்ச்சி அளிக்க கூடிய செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் மோட்டார் வாகனச்சட்டம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி அளித்துள்ளார். அதில், மோட்டார் வாகனச்சட்டம் வருவாய்க்காக கொண்டு வரப்பட்டது அல்ல, மக்களின் உயிரைக் காப்பதற்காக கொண்டுவரப்பட்டது. சிலர் அபராதம் போடுவதற்கும், அபராதம் கட்டுவதற்கும் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
வன்புணர்வு வழக்குகளுக்கு ஏன் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டம் மீது பயம் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி சட்டம் கொண்டு வந்துள்ளனர். அப்படித்தான் இந்த சட்டமும்.
உயிரை விட பணம் முக்கியமா? சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும். சட்டத்தின் மீது பயத்தையும், மரியாதையையும் உருவாக்கவே மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துகிறோம்
போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது பற்றி மாநில அரசு முடிவெடுக்கலாம். எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட மாற்றங்களை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக நான் மாநில முதல்வர்களுடன் பேச போகிறேன்.
இந்த சட்டத்தை கடைபிடிக்க மாநில அரசின் ஒத்துழைப்பும் வேண்டும். கனடா, கலிபோர்னியா, லண்டனில் எல்லாம் மிக கடுமையாக விதிகள் இருக்கிறது. அதை பார்த்து, படித்துதான் இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளால் வருடம் முழுக்க பல லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். நாம் இப்போது உயிர்களை பற்றி பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் இனியும் அபராதம் குறித்து பேச கூடாது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications