Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா சீன் மாறுதே.. "பிரதமர்" பதவி.. இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் தரப்பிற்கு வந்த அழைப்பு? பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிதிஷ்குமாரை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி பிரதமர் பதவியைத் தரத் தயாராக இருந்ததாக நிதிஷ் கட்சியைச் சேர்ந்த கே.சி. தியாகி பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் பாஜக ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவு மிக முக்கியமாக மாறி இருக்கிறது.

nitish kumar Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress 2024 2024

இருவரையும் இந்தியா கூட்டணி தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே பீகார் முதல்வரும் ஜேடியு கட்சித் தலைவருமான கே.சி. தியாகி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமார்: அதாவது நிதிஷ் குமாரை தங்கள் பக்கம் இழுக்க எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருந்ததாகக் கூறிய கே.சி. தியாகி, இருப்பினும் நிதிஷ்குமார் அதை ஏற்க மறுத்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நிதிஷ் குமாருக்கு எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியில் இருந்து பிரதமராக வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்தியா கூட்டணியின் கன்வீனராக இருக்கக் கூடாது என யார் எதிர்ப்பு தெரிவித்தார்களோ.. இன்று அவர்களே பிரதமர் பதவி வழங்கத் தயார் என்றார்கள். ஆனால், நிதிஷ் அதை மறுத்துவிட்டார், நாங்கள் என்டிஏ கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

என்டிஏ கூட்டணி: இருப்பினும், யார் பிரதமர் பதவியை வழங்குவதாக கூறினர் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்த கேள்விக்கு அவர், "சில தலைவர்கள் நிதிஷ் குமாரை நேரடியாக அணுக விரும்பினர். ஆனால், அவர்கள் மோசமாக எங்கள் தலைவரை நடத்தியதாலேயே நாங்கள் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அதன் பிறகு தான் என்டிஏ கூட்டணியில் இணைந்தோம். இதே கூட்டணியில் பயணிப்போம்.. கூட்டணி மாறும் பேச்சுக்கே இடமில்லை" என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் மறுப்பு: கே.சி. தியாகியின் இந்தப் பேச்சு தேசிய அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது. இருப்பினும், இதை மறுத்துள்ள காங்கிரஸ், இதுபோல எந்தவொரு ஆஃபரையும் தாங்கள் முன்மொழியவில்லை எனக் கூறியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "நிதிஷ் குமாரை பிரதமர் ஆக்க இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் அணுகியது போலத் தெரியவில்லை.. எங்களிடம் அப்படி எந்தத் தகவலும் இல்லை. யார் அணுகியது என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்" என்றார்.

நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அக்கட்சி 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் தனிப்பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. இதனால் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவின் கூட்டணிக் கட்சிகளான ஜேடியு மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவு மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது.

பிரதமர் மோடி: லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லை என்ற தகவல் வெளியான உடனேயே தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரை தங்கள் பக்கம் கொண்டு வர இந்தியா கூட்டணி முயற்சிகள் எடுத்தாக கூறப்பட்டது. இருப்பினும், சந்திரபாபு நாயுடுவும் சரி, நிதிஷ்குமாரும் சரி என்டிஏ கூட்டணியில் தொடர்வது என்றை முடிவை எடுத்துவிட்டனர். அவர்கள் என்டிஏ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவைத் தெரிவித்த நிலையில், அதன் பின்னரே மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் நாளை மாலை மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+