ஈவிஎம் மோசடி... தேர்தல் ஆணையத்துக்கு பொறுப்பு இருக்கு.. பிரணாப் முகர்ஜி பரபரப்பு அறிக்கை
டெல்லி: வாக்கு இயந்திர முறைகேடு தொடர்பான புகார்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்து உள்ளார்.
வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்வதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பல இடங்களில் வாக்க இயந்திரங்கள் மோசடி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்ததால், வாக்கு இயந்திர விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அது தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரணாப் முகர்ஜி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வாக்காளர்களின் தீர்ப்பை மாற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் கவலை அளிக்கிறது. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.
ஜனநாயகத்தின் அடிப்படைடையே கேள்வி கேட்கும் எந்த ஊகங்களுக்கும் இடமளிக்க கூடாது. வாக்களிக்கும் புனிததன்மை தான் மக்களின் ஆணை. அதன் மீது சிறதளவு கூட சந்தேகம் இருக்கக்கூடாது.
எனவே வாக்கு இயந்திரங்களின் (ஈவிஎம் மிஷின்களின்) பாதுகாப்பினை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்கள் அனைத்து யூகங்கள் மற்றும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்
முன்னதாக நேற்று டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, தேர்தல் ஆணையம் தேர்தலை சிறப்பாக நடத்தியிருப்பதாக பாராட்டி இருந்தார். இன்றைக்கு ஜனநாயம் வெற்றியடைந்திருக்கிறது என்றால், இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் தொடங்கி, இன்றைய தேர்தல் ஆணையர்கள் வரை தேர்தலை சிறப்பாக நடத்தியதே அதற்குக் காரணம் என பிராணப் முகர்ஜி கூறியிருந்தார் .
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications