தமிழ் வாழ்க கோஷங்களுக்கு மத்தியில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என முழங்கிய ஓபிஎஸ் மகன்.. பாராட்டிய பாஜக
Recommended Video
டெல்லி: தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என கோஷங்களுக்கு மத்தியில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்குமார் தெரிவித்தார். இதை மேஜையை தட்டி பாஜக எம்பிக்கள் வரவேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவைக்கான முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது.

நேற்றும், இன்றும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக எம்பிக்கள் பதவியேற்றனர். முதலில் புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் பதவியேற்ற போது தமிழிலேயே பதவியேற்றார்.
இதைத் தொடர்ந்து பதவியேற்ற தமிழக எம்பிக்கள் தமிழில் பதவியேற்றனர். அப்போது பெரும்பாலான எம்பிக்கள் தமிழ் வாழ்க, வாழ்க தமிழ்நாடு என கூறியதற்கு பாஜகவினர் பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டனர்.
இந்த நிலையில் அதிமுகவின் ஒரே எம்பியான ஓபி ரவீந்திரநாத் குமார் பதவியேற்க வந்தார். அப்போது அவர் வாழ்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர், வாழ்க புரட்சித் தலைவி அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என கூறினார். உடனே பாஜக எம்பிக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications