5 ஜி என சொன்ன நிர்மலா சீதாராமன்.. அப்போ பிஎஸ்என்எல்? கோஷமிட்ட எதிர்க்கட்சிகள்!
டெல்லி: 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இந்த நிதியாண்டில் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் விடப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த போது பிஎஸ்என்எல் என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர்.
Recommended Video
ஆண்டாண்டு காலங்களாக பட்ஜெட் உரை இருக்கும் பெட்டி பளபளப்பாக தோல் பொருளாளான பெட்டியாக இருந்து வந்தது. இந்த மரபை கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தனது முதல் பட்ஜெட்டியிலேயே சிவப்பு நிற துணிப்பையில் இந்திய அரசு சின்னம் பொதித்து மாற்றம் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் துணிப்பையும் விட்டுவிட்டு டேப்லெட்டுக்கு மாறிவிட்டார். டிஜிட்டல் இந்தியாவை முன்னெடுக்கும் விதமாக பட்ஜெட் உரையை பேப்பரில் அச்சிடாமல் டேப்லெட்டில் சாப்ட் காப்பியாக வைத்திருந்தார்.

மேட் இன் இந்தியா
அந்த டேப்லெட்டும் மேட் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார். தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பேசுகையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகளின் விற்பனை விரைவில் தொடங்கும். ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்.

இணைய பரிவர்த்தனை
டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் பணத்திற்காக புதிய மத்திய வங்கி ஏற்படுத்தப்படும். 25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்கள் அமைக்கப்படும். 5 ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டு வரப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். தொலைத் தொடர்பு துறையில் 5ஜி அடிப்படையில் சேவை வழங்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் 2022- 2023 ஆம் ஆண்டுக்குள் அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்றார்.

பிஎஸ்என்எல்
அப்போது எதிர்க்கட்சிகள் பிஎஸ்என்எல், பிஎஸ்என்எல்லின் நிலை என்ன? பிஎஸ்என்எல்லுக்கு 5 ஜி இல்லையா என கோஷமிட்டனர். அப்போது லேசாக புன்னகைத்தவாறே நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடர்ந்தார். இந்தியாவில் இதுவரை 5 ஜி அலைக்கற்றை தொடர்பான ஏலம் விடப்படவில்லை.

5ஜி அலைக்கற்றை
இந்த நிலையில் 5 ஜி அலைக்கற்றையை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறார்கள். 5ஜி அலைக்கற்றை செயல்படத் தொடங்கியவுடன் இணையத்தின் வேகம் ஏற்கெனவே இருக்கும் இணைப்பின் வேகத்தைவிட 20 மடங்கு அதிகமாகவே இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications