டெல்லியை ஆக்ரமித்த கொரோனா...56 சதவீதம் பேர் பாதிப்பு
டெல்லி : டெல்லியில் பாதிக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீரோ சர்வேயில் தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக தென்கிழக்கு டெல்லியில் 62.18 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
டில்லியில் 5 வது முறையாக சீரோ சர்வே ஜனவரி 15 முதல் 23 வரை நடத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய 28,000 பேரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தென்கிழக்கு டெல்லியில் 62.18 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையாக வடக்கு மாவட்டங்களில் 49 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக டெல்லி முழுவதும் 56.13 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் டெல்லியில் 25-26 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8635 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 8 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் ஒரு நாளைய கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறி இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தினமும் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 9000 க்கும் கீழ் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications