ப. சிதம்பரம் புத்திசாலி.. அவர் கருப்பு பணத்தை வெள்ளையாக்கியது எப்படி? அமலாக்கத்துறை பரபர வாதம்!

மிக மிக புத்திசாலித்தனமாக ப. சிதம்பரம் முறைகேடு செய்தார் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை வாதம் செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ED argument against Kapil Sipal argument in Supreme Court

    டெல்லி: மிக மிக புத்திசாலித்தனமாக ப. சிதம்பரம் முறைகேடு செய்தார் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை வாதம் செய்துள்ளது.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்ய அமலாக்கத்துறையும் தீவிரமாக முயன்று வருகிறது. இந்த நிலையில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பெயில் மற்றும் முன் ஜாமீன் வழக்கு விசாரணை இன்று நடந்தது.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, போபன்னா ஆகியோர் அமர்வு வழக்கை விசாரித்தது. ப. சிதம்பரம் தரப்பு நேற்று செய்த வாதத்திற்கு இன்று பதில் வழங்கப்பட்டது. ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பாக சொலீஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.

    என்ன வாதம்

    என்ன வாதம்

    அவர் தனது வாதத்தில், ப. சிதம்பரம் அறிவாளி, சாதூர்யமிக்கவர். புத்திசாலித்தனமாக ப. சிதம்பரம் முறைகேடு செய்தார். சட்டவிரோத பண பரிமாற்றம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தால் உலகம் முழுக்க கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. சில நாடுகளில் சட்டவிரோத பண பரிமாற்றம் மிகப்பெரிய கிரிமினல் குற்றமாக பார்க்கடுகிறது.

    தவறு

    தவறு

    சட்டவிரோத பண பரிமாற்றம் மூலம் செலவு செய்யப்படும் பணமும் முதலீடு செய்து வரும் வருமானமும் கூட முறைகேடானதுதான். நாம் இங்கே மிகவும் புத்திசாலியான மனிதர்களுடன் மோதிக்கொண்டு இருக்கிறோம். ஒரு முட்டாள் இப்படி கருப்பு பணத்தை வெள்ளையாக்க முடியாது.

    மிக வேகம்

    மிக வேகம்

    இதை அவர்கள் ஒரே நாளில் வேகமாக செய்யவில்லை. பொறுமையாக திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேற்றி இருக்கிறார்கள். இதை அவர்கள் டிஜிட்டல் முறையில் செய்துள்ளனர். டிஜிட்டல் முறையில் அவர்கள் பணத்தை வெள்ளையாக்கி உள்ளனர். அதனால் இந்த குற்றத்திற்கு எந்த விதமான ஆதாரமும் இருக்காது என்று நினைக்கிறார்கள்.

    ரேப்

    ரேப்

    பாலியல் வன்புணர்வு எல்லாம் நேரடியாக செய்யப்படும், அங்கு ஆதாரங்கள் வெளிப்படையாக் தெரியும். ஆதாரங்களை சீலிடப்பட்ட கவரில் மட்டும்தான் அளிக்க முடியும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வரை முழு ஆதாரத்தை எங்களால் தாக்கல் செய்ய முடியாது.

    முட்டாள்தனம்

    முட்டாள்தனம்

    அது மிகவும் முட்டாள்தனமாக இருக்கும், இந்த ஆதாரங்கள் எல்லாம் மிகவும் வலிமையானது, அதை அப்படியே வெளியே விட முடியாது. சட்டம் வருவதற்கு முன்பும் மட்டும் அல்ல, சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்ட பின்பும் கூட இவர்கள் முறைகேடு செய்துள்ளனர்.

    ப. சிதம்பரம்

    ப. சிதம்பரம்

    அதனால் இந்த வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்ய எல்லா விதமான உரிமையும் சிபிஐக்கும், அமலாக்கத்துறைக்கும் இருக்கிறது. இதில் ஆதாரங்களை சிதைக்க கூடாது என்பதற்காக நாங்கள் கைது நடவடிக்கையை மேற்கொண்டோம். எங்கள் கைதில் நியாயம் இருக்கிறது.

    என்ன அவமானம்

    என்ன அவமானம்

    இதில் அவமானம், அவமானம், அவமானம் என்று ப. சிதம்பரம் தரப்பு சொல்லிறது, ஆனால் நான் சொல்கிறேன் இது தற்காப்பு தற்காப்பு தற்காப்பு மட்டும்தான். கேஸ் டயரியை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை நடத்தலாம், இதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது இதுதான் முக்கிய ஆதாரம், அந்த ஆதாரத்தை ப. சிதம்பரம் பார்க்க முடியாது, அதற்கு அனுமதி அளிக்க முடியாது, என்று குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+