இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்.. பயங்கரவாதிகளை சந்தித்த பாக். உளவு துறை
Recommended Video
டெல்லி: உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் திசைதிருப்பும் முயற்சியாக இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் காஷ்மீரில் புதியதொரு தாக்குதலை நடத்துவதற்காக திட்டமிட பயங்கரவாத அமைப்புகளிடம் பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீருக்கு 70 ஆண்டுகள் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இந்த நிலையில் இதை எதிர்த்த பாகிஸ்தான், உலக நாடுகளின் ஆதரவை நாடியது.

ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை சென்ற பாகிஸ்தான், முகத்தை தொங்க போட்டுக் கொண்டு வந்தது. இதனால் இந்தியா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. இதன் எதிரொலியாக இந்தியா மீது போர் மூளும் என பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கைவிடுத்துவிட்டு பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானின் உளவு அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய உளவு துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெய்ஷ் இ முகமது, லக்ஷர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், காலிஸ்தானி ஜிந்தாபாத் அமைப்பு ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ எனப்படும் உளவு அமைப்பானது இஸ்லாமாபாத்தில் ரகிசய ஆலோசனை நடத்தியது.
அந்த ஆலோசனையில் இந்தியாவின் சில பகுதிகளிலும் ஜம்மு காஷ்மீரிலும் புதிய தாக்குதல்களை நடத்தலாம் என முடிவு செய்துள்ளதாக இந்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications