கவலைப்படாதீங்க.. திரும்பவும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசத்தை நீட்டிச்சுட்டாங்க
டெல்லி: பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு டிசம்பர் 31 வரை நீட்டித்து இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாக இருந்தது.
ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.

அதேநேரம் ஒவ்வொரு மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை மத்திய அரசு பான்-ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து வந்தது.இந்நிலையில் பான்-ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) 2019 மார்ச் 31 என இருந்ததை செப்டம்பர் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் பான் உடன் ஆதாரை இணைக்கும் தேதியை நிர்ணயித்திருந்தது.
இதன்படி பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் பலரும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்தியநிதியமைச்சகம் நீட்டித்துள்ளது. இதன்படி வரும டிசம்பர் 31ம் தேதிக்குள் நீட்டிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே நிதி தொடர்பான முறைகேடு புகார்கள் இருக்காது என்பதால் அதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம் பான் எண்ணை வைத்துள்ள கோடிக்கணக்கான மக்களின் நலன் கருதி அவ்வப்போது காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்து வருகிறது.
ஏனெனில் பான் கார்டு செயல்பாட்டில் இல்லை என்றால் ஒருவரால் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடமுடியாது. வங்கி கணக்கு உள்பட பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு அவசியம் என்கிற நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காததற்காக அவர்களின் பான் கார்டை ரத்து செய்தால் நிச்சயம் பலருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். இதைகருத்தில் கொண்டே அவ்வப்போது காலநீட்டிப்பை அரசு வழங்கி வருகிறது.
எனினும் தற்போது வழங்கியுள்ள காலநீட்டிப்பான டிசம்பர் 31ம் தேதி 2019ம் ஆண்டுக்குள் பான் எண் உடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் நிச்சயம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்களால் வங்கி மற்றும் நிதி சேவைகள் செய்ய முடியாமல் அவதிப்பட நேரிடலாம். எனவே பான் கார்டுடன் ஆதாரை அவர்களை இணைத்துவிடுவது நல்லது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications