இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதி உச்சம்- ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க பெற்றோர் எதிர்ப்பு
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிக உச்சமாக இருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்கிற மத்திய அரசின் முடிவுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 6-வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு என்பது 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை இருக்கிறது. கொரோனா மரணங்களும் நாள்தோறும் 200க்கும் அதிகமாக இருந்து வருகிறது.

பள்ளிகள் திறப்பா?
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆகஸ்ட் 15-ந் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறியிருந்தார். அனேகமாக செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்த பள்ளிகள் திறக்கும் என கூடும் என தகவல்கள் வெளியாகின.

கொரோனா பாதிப்பு
இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்., நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது; ஒவ்வொரு நாளும் 8 ஆயிரம் பேர் முதல் 9 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிகளை திறக்காதீங்க
இந்த சூழ்நிலையில் பள்ளிகளை உடனே திறக்கக் கூடாது என்கின்றனர் பெற்றோர். இந்தியாவில் மொத்தம் 33 கோடி மாணவர்கள் இருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா ஜீரோ பாதிப்பு என்று அறிவிக்கும் வரை பள்ளிகளையே திறக்கக் கூடாது என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. இதையும் மீறி பள்ளிகளைத் திறந்தால் பிள்ளைகளை அனுப்பவும் மாட்டோம் என்கின்றனர் பெற்றோர்கள்.

ஆன்லைனிலேயே வகுப்பு நடத்துங்க
அத்துடன் ஆன்லைன் மூல மாணவர்களுக்கு தற்போது வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையே தொடர்ந்து பின்பற்றலாமே? எதற்காக வீணாக அரசு ரிஸ்க் எடுக்கிறது என்பதும் பெற்றோர்களின் கேள்வி. பள்ளிகூடங்களைத் திறந்தால் மாணவர்களால் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவே முடியாது என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications