இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதி உச்சம்- ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க பெற்றோர் எதிர்ப்பு
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிக உச்சமாக இருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்கிற மத்திய அரசின் முடிவுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 6-வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு என்பது 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை இருக்கிறது. கொரோனா மரணங்களும் நாள்தோறும் 200க்கும் அதிகமாக இருந்து வருகிறது.

பள்ளிகள் திறப்பா?
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆகஸ்ட் 15-ந் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறியிருந்தார். அனேகமாக செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்த பள்ளிகள் திறக்கும் என கூடும் என தகவல்கள் வெளியாகின.

கொரோனா பாதிப்பு
இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்., நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது; ஒவ்வொரு நாளும் 8 ஆயிரம் பேர் முதல் 9 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிகளை திறக்காதீங்க
இந்த சூழ்நிலையில் பள்ளிகளை உடனே திறக்கக் கூடாது என்கின்றனர் பெற்றோர். இந்தியாவில் மொத்தம் 33 கோடி மாணவர்கள் இருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா ஜீரோ பாதிப்பு என்று அறிவிக்கும் வரை பள்ளிகளையே திறக்கக் கூடாது என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. இதையும் மீறி பள்ளிகளைத் திறந்தால் பிள்ளைகளை அனுப்பவும் மாட்டோம் என்கின்றனர் பெற்றோர்கள்.

ஆன்லைனிலேயே வகுப்பு நடத்துங்க
அத்துடன் ஆன்லைன் மூல மாணவர்களுக்கு தற்போது வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையே தொடர்ந்து பின்பற்றலாமே? எதற்காக வீணாக அரசு ரிஸ்க் எடுக்கிறது என்பதும் பெற்றோர்களின் கேள்வி. பள்ளிகூடங்களைத் திறந்தால் மாணவர்களால் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவே முடியாது என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications