வக்பு வாரிய திருத்த மசோதா: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் தாக்கல் இல்லை- பதவிக் காலம் நீட்டிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படாது என்பது உறுதியாகி உள்ளது.

இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சொத்து விவகாரங்களை நிர்வகிப்பது தொடர்பான சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்த போது எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. இதனால் இந்த மசோதாவை ஆராய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

parliament waqf

நாடாளுமன்ற இருசபைகளின் கூட்டுக் குழு இந்த மசோதா குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கூட்டப்பட்டுள்ளது. இதனால் நடப்பு கூட்டத் தொடரிலேயே வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களோ, இந்த விசாரணைக் குழுவில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும்; அதனால் இந்த குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து இதற்கான தீர்மானம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூ0ட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படாது என்பது உறுதியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+