Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டுப்பாடுகளை அதிகரிப்பு.. இந்தியா வர கொரோனா "நெகட்டிவ்" கட்டாயம்.. மன்சுக் மாண்டவியா உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனா, ஹாங் காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியா வருவதற்கு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியா வரும் பயணிகள், பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டிபிசிஆர் சோதனை சான்றிதழை ஏர் சுவிதா தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் புதிய வகை கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒமிக்ரானில் இருந்து மாறுபாடு அடைந்த புதிய வகை கொரோனாவான பிஎப்7 கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை பிஎப் 7 கொரோனா ஒருவரிடமிருந்து 16 பேருக்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.

சீனாவில் புதிய வகை கொரோனா சீனாவில் வேகமாக பரவி வருவதால், உலக நாடுகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனாவை தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎப்7 வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது.

3 நாட்களில் 39 பேருக்கு கொரோனா

3 நாட்களில் 39 பேருக்கு கொரோனா

இதையடுத்து அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் கடந்த 3 தினங்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன. இது மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மூவருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் மூவருக்கு கொரோனா

அதேபோல் தமிழ்நாட்டில் சீனாவில் இருந்து மதுரை வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேருக்கும், துபாயில் இருந்த வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

ஆர்டிபிசிஆர் சோதனை

ஆர்டிபிசிஆர் சோதனை

தொடர்ந்து சீனா, சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சுழற்சி முறையில் 2 சதவிகிதம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்


இந்த நிலையில் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை மற்றும் ஆர்டிபிசிஆர் சோதனை அறிக்கைகளை 'ஏர் சுவிதா' தளத்தில் பதிவேற்றவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த பரிசோதனை பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+