தமிழக எம்பிக்களின் கோரிக்கை ஏற்பு.. புதிய கல்விக்கொள்கை பற்றி கருத்து கூற 15 நாட்கள் கூடுதல் அவகாசம்
புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
கல்வித்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டுள்ளது. மும்மொழிக் கல்வி உட்பட பல்வேறு விஷயங்களை மத்திய அரசு இதில் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதேபோல் கல்வித்துறையில் மாநில அரசுகளுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரத்தையும் பிடுங்கும் அளவிற்கு மத்திய அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்து உள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்பு பல தரப்பில் இருந்து எழுந்து வருகிறது.

என்ன எதிர்ப்பு
நாடு முழுக்க கல்வியாளர்கள் பலர் இந்த புதிய கல்விக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த கல்விக்கொள்கை ஏழை மாணவர்களுக்கு எதிரானது. மாணவர்கள் பள்ளிக்கூடம் வரவைக்க இந்த கல்விக்கொள்கை உதவாது. அவர்களை தேர்வு தேர்வு என்று பள்ளியை விட்டே ஓட வைக்க இந்த கொள்கை வழி செய்யும் என்று பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கருத்து
இதையடுத்து இந்த கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க இந்த மாதம் 31ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. புதிய கல்விக்கொள்கை குறித்த ஷரத்துகளை படித்துவிட்டு, அதில் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியது. இதற்கான அவகாசம் இரண்டு நாட்களில் முடிகிறது.

கோரிக்கை
இந்த நிலையில் கல்விக்கொள்கை அம்சங்களை முழுமையாக படிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று தமிழக எம்பிக்கள் லோக்சபாவில் கோரிக்கை வைத்து இருந்தனர். இன்னும் இதை முழுதாக படிக்க வேண்டும். இந்த புதிய கல்விக்கொள்கையில் நிறைய தவறான கருத்துக்கள் இருப்பதால் அதை ஆராய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

என்ன நீட்டிப்பு
இதில் உள்ள சில ஷரத்துகள் ஏழை மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது என்றும் கருத்து கூறி இருந்தனர். இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழக எம்பிக்களின் கோரிக்கையை அடுத்து அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications