Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சமூக சேவை என்ற பெயரில்.." ஸ்லீப்பர் செல்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்! அதிர வைக்கும் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் நடத்திய ரெய்டு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில காலமாகவே நாட்டின் எல்லைப் பகுதியில் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவல் முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

குறிப்பாகப் பாகிஸ்தான் நாட்டில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவத் தயாராக உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு, பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டு இருந்தார்.

 அசம்பாவித சம்பவங்கள்

அசம்பாவித சம்பவங்கள்

இந்த ஊடுருவல் முயற்சிகளை எல்லையில் இருக்கும் பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். இதற்கிடையே நமது நாட்டிற்குள் அசம்பாவித சம்பவங்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு தான், பீகார் மாநிலத்தில் பிரதமரைக் கொலை செய்யச் சதி செய்திருந்த இருவரை அம்மாநில போலீசார் கைது செய்திருந்தனர்.

 அதிரடி ரெய்டு

அதிரடி ரெய்டு

அதேபோல கடந்த வாரம் அசாமில் இருந்து வந்த பயங்கரவாதிகளைப் பெங்களூர் போலீசார் கைது செய்து இருந்தனர். இப்படி பயங்கரவாதிகள் அடுத்தடுத்து கைது செய்யப்படும் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாகத் தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

 ஸ்லீப்பர் செல்

ஸ்லீப்பர் செல்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (Popular Front of India) அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் பயங்கரவாத ஸ்லீப்பர் செல்களுக்கு சொந்தமான இடங்களிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை இந்தியா டுடே செய்தி நிறுவனம் சில முக்கிய தகவல்கள் வெளியிட்டு உள்ளது. இந்த ரெய்டில் அமைப்பின் விரிவாக்கம் குறித்த ப்ளூ பிரிண்டை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

Recommended Video

    Erode-ல் NIA அதிகாரிகள் விசாரணை | Karnataka-வில் BJP நிர்வாகி கொலை
     சமூக சேவை என்ற பெயரில்

    சமூக சேவை என்ற பெயரில்

    மேலும், அரசு அமைப்புகளிடம் இருந்து தப்பித்து தங்கள் கொள்கைகளைப் பரப்ப பல்வேறு துணை அமைப்புகளையும் தொடங்கியதற்கான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். சமூக வேவைகள் என்ற பெயரில் நிதியைத் திரட்டி சமூக விரோத செயல்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்கு அந்த நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

     ஆட்சேர்ப்பு

    ஆட்சேர்ப்பு


    பள்ளிகள், கல்லூரிகள், மதரஸாக்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரெய்டில் கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+