இந்தியாவில் கொரோனா தடுப்பூசி... விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது பைசர்
டெல்லி: தனது கொரோனா தடுப்பூசிக்கு அவசரக் கால அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிஜிசிஐ) அளித்திருந்த விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், உருமாறிய கொரோனா வேகமாகப் பரவும் என்பதால் இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் என மொத்தம் மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள்
இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஜனவரி மாத தொடக்கத்தில் அனுமதி அளித்திருந்தது. சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்கிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசி விநியோகிக்கும் பொறுப்பு இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பாரத் பயோடெக் சொந்தமாக கோவாக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

பைசர் விண்ணப்பம்
இருப்பினும், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் முன்னரே அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடனேயே அவசரக்கால அனுமதி வேண்டி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதியே பைசர் நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது.

கூடுதல் தகவல்கள்
பைசர் நிறுவனம் அமெரிக்காவில் மட்டுமே தனது மருத்துவ சோதனைகளை மேற்கொண்டிருந்தது. இருப்பினும், அவசர நிலையைக் கருத்தில் இந்தியாவில் மருத்துவ சோதனையை மேற்கொள்ளாமலேயே அனுமதி அளிக்கக் கோரி விண்ணப்பித்திருந்தது. இருப்பினும், மருத்துவ சோதனைகள் குறித்துக் கூடுதல் தகவல்களை அளிக்குமாறு பைசர் நிறுவனத்திடம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டது.

திரும்பப் பெற்றுக்கொண்ட பைசர்
இந்நிலையில், பைசர் நிறுவனம் தனது விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. டிஜிசிஐ கேட்டுள்ள கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டு, மீண்டும் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் ஃபைசர் அறிவித்துள்ளது. டிஜிசிஐ அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் விரைவில் இந்தியாவிற்குத் தேவையான தடுப்பூசியை வழங்க முடியும் என நம்புவதாகவும் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications