இந்தியாவில் கொரோனா தடுப்பூசி... விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது பைசர்
டெல்லி: தனது கொரோனா தடுப்பூசிக்கு அவசரக் கால அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிஜிசிஐ) அளித்திருந்த விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், உருமாறிய கொரோனா வேகமாகப் பரவும் என்பதால் இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் என மொத்தம் மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள்
இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஜனவரி மாத தொடக்கத்தில் அனுமதி அளித்திருந்தது. சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்கிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசி விநியோகிக்கும் பொறுப்பு இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பாரத் பயோடெக் சொந்தமாக கோவாக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

பைசர் விண்ணப்பம்
இருப்பினும், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் முன்னரே அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடனேயே அவசரக்கால அனுமதி வேண்டி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதியே பைசர் நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது.

கூடுதல் தகவல்கள்
பைசர் நிறுவனம் அமெரிக்காவில் மட்டுமே தனது மருத்துவ சோதனைகளை மேற்கொண்டிருந்தது. இருப்பினும், அவசர நிலையைக் கருத்தில் இந்தியாவில் மருத்துவ சோதனையை மேற்கொள்ளாமலேயே அனுமதி அளிக்கக் கோரி விண்ணப்பித்திருந்தது. இருப்பினும், மருத்துவ சோதனைகள் குறித்துக் கூடுதல் தகவல்களை அளிக்குமாறு பைசர் நிறுவனத்திடம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டது.

திரும்பப் பெற்றுக்கொண்ட பைசர்
இந்நிலையில், பைசர் நிறுவனம் தனது விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. டிஜிசிஐ கேட்டுள்ள கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டு, மீண்டும் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் ஃபைசர் அறிவித்துள்ளது. டிஜிசிஐ அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் விரைவில் இந்தியாவிற்குத் தேவையான தடுப்பூசியை வழங்க முடியும் என நம்புவதாகவும் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு! -
மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு! -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு! -
இலக்கியம் முதல் விண்வெளி வரை: டேராடூனில் களைகட்டும் டூன் இலக்கியத் திருவிழா 2026! -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications