தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்.. ராஜபாளையம் நாய்கள்.. மன் கீ பாத்தில் தமிழகத்தை புகழ்ந்த பிரதமர் மோடி
டெல்லி: தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகளை பிரதமர் மோடி தனது மன் கீ பாத் உரையில் புகழ்ந்து உள்ளார். அதேபோல் ராஜபாளையம் நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
பிரதமர் மோடியை இன்று வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். ஆத்ம நிர்பார் திட்டம் குறித்து பிரதமர் மோடி இன்று தனது உரையில் பேசினார். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பெரும்பாலும் மன் கி பாத் உரையில் தமிழகம் குறித்து பிரதமர் மோடி பேசுவது வழக்கம். இன்றும் தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொம்மைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

மோடி உரையில்
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது உரையில், 5 மாதங்களாக நாம் வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறோம். நாம் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டுப் பொருட்களை நாம் சொந்த நாட்டில் வாங்க வேண்டும்.

பொம்மைகள் எப்படி
இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருட்களை ஊக்குவிக்க வேண்டும்.சில பகுதிகளில் விளையாட்டு பொம்மைகள் அதிகம் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் தஞ்சாவூர் பொம்மைகள் பிரபலமானவை. ஆந்திர பிரதேசத்தில் கொண்டபள்ளி, கர்நாடகாவில் ராமநகராவிலும் பொம்மைகள் செய்யப்படுகிறது.

உத்தர பிரதேச நிகழ்வு
உத்தர பிரதேசத்தில் வாரணாசி, அசாமிலும் பொம்மைகள் செய்யப்படுகிறது. இங்கு செய்யப்படும் விளையாட்டு பொருட்களை அதிகம் வாங்க வேண்டும். சொந்த தயாரிப்பில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது.நமது நாட்டில் திறமையான கைவினைகலைஞர்கள் உள்ளனர். ஒன்று சேர்ந்து விளையாடும் போது குழந்தைகள் இடையே ஒற்றுமை வளர்கிறது.

பொம்மைகள் மட்டுமல்ல
பொம்மைகள் மட்டுமல்ல செல்போன் செயலிகளையும் நாம் உருவாக்க வேண்டும். நவீன செயலிகளை உருவாக்க இளைஞர்கள் முன் வர வேண்டும். செயலிகளை உருவாக்க 'ஆப் இன்னோவேஷன் சேலஞ்ச்' போட்டி நடக்கிறது. இந்தியாவில் செயலிகளை உருவாக்க வேண்டும். ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் செயலிகளை உருவாக்க வேண்டும், என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் .

நாய்கள் எப்படி
அதேபோல் ராஜபாளையம் நாய்கள், சிப்பி நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும், இந்திய இனத்தை சேர்த்த நாய்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்திய இனத்தை சேர்ந்த நாய்கள் திறமையானது. நாட்டு நாய்கள் வலிமையானது, பாசமானது, என்றும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications