தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்.. ராஜபாளையம் நாய்கள்.. மன் கீ பாத்தில் தமிழகத்தை புகழ்ந்த பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகளை பிரதமர் மோடி தனது மன் கீ பாத் உரையில் புகழ்ந்து உள்ளார். அதேபோல் ராஜபாளையம் நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் மோடியை இன்று வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். ஆத்ம நிர்பார் திட்டம் குறித்து பிரதமர் மோடி இன்று தனது உரையில் பேசினார். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பெரும்பாலும் மன் கி பாத் உரையில் தமிழகம் குறித்து பிரதமர் மோடி பேசுவது வழக்கம். இன்றும் தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொம்மைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

 மோடி உரையில்

மோடி உரையில்

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது உரையில், 5 மாதங்களாக நாம் வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறோம். நாம் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டுப் பொருட்களை நாம் சொந்த நாட்டில் வாங்க வேண்டும்.

பொம்மைகள் எப்படி

பொம்மைகள் எப்படி

இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருட்களை ஊக்குவிக்க வேண்டும்.சில பகுதிகளில் விளையாட்டு பொம்மைகள் அதிகம் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் தஞ்சாவூர் பொம்மைகள் பிரபலமானவை. ஆந்திர பிரதேசத்தில் கொண்டபள்ளி, கர்நாடகாவில் ராமநகராவிலும் பொம்மைகள் செய்யப்படுகிறது.

உத்தர பிரதேச நிகழ்வு

உத்தர பிரதேச நிகழ்வு

உத்தர பிரதேசத்தில் வாரணாசி, அசாமிலும் பொம்மைகள் செய்யப்படுகிறது. இங்கு செய்யப்படும் விளையாட்டு பொருட்களை அதிகம் வாங்க வேண்டும். சொந்த தயாரிப்பில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது.நமது நாட்டில் திறமையான கைவினைகலைஞர்கள் உள்ளனர். ஒன்று சேர்ந்து விளையாடும் போது குழந்தைகள் இடையே ஒற்றுமை வளர்கிறது.

பொம்மைகள் மட்டுமல்ல

பொம்மைகள் மட்டுமல்ல

பொம்மைகள் மட்டுமல்ல செல்போன் செயலிகளையும் நாம் உருவாக்க வேண்டும். நவீன செயலிகளை உருவாக்க இளைஞர்கள் முன் வர வேண்டும். செயலிகளை உருவாக்க 'ஆப் இன்னோவேஷன் சேலஞ்ச்' போட்டி நடக்கிறது. இந்தியாவில் செயலிகளை உருவாக்க வேண்டும். ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் செயலிகளை உருவாக்க வேண்டும், என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் .

நாய்கள் எப்படி

நாய்கள் எப்படி

அதேபோல் ராஜபாளையம் நாய்கள், சிப்பி நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும், இந்திய இனத்தை சேர்த்த நாய்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்திய இனத்தை சேர்ந்த நாய்கள் திறமையானது. நாட்டு நாய்கள் வலிமையானது, பாசமானது, என்றும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+