என் அம்மா தடுப்பூசி போட்டாங்க; ரொம்ப ஹேப்பி... தடுப்பூசி போட மத்தவங்கள ஊக்குவிங்க...மோடி வேண்டுகோள்!
டெல்லி: கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எனது அம்மா இன்று போட்டுக் கொண்டார். இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
உங்களைச் சுற்றி தடுப்பூசி எடுக்க தகுதியுள்ளவர்களுக்கு உதவ வேண்டும். தடுப்பூசி போடுமாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு இணை நோய்களை கொண்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா ஆட்டம் போட்டு வருகிறது தமிழ்நாட்டிலும் 500-க்குள் இருந்த பாதிப்புகள் தற்போது 600-க்கும் மேல் சென்று விட்டது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் நாட்டின் மொத்த பாதிப்பில் 86% உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடும் பணி தீவிரம்
கொரோனா பாதிப்புகளை விரட்டியடிக்க நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு இணை நோய்களை கொண்டவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

மோடியின் தாய் தடுப்பூசி போட்டார்
பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதேபோல் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹுரா பென், இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ள மோடி, அனைவரும் தடுப்பூசி போடும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி போட ஊக்கப்படுத்துங்கள்
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எனது அம்மா இன்று போட்டுக் கொண்டார். இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் உங்களைச் சுற்றி தடுப்பூசி எடுக்க தகுதியுள்ளவர்களுக்கு உதவ வேண்டும். தடுப்பூசி போடுமாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications