2014க்கு முன்பு 1 ஜிபி நெட் டேட்டா ரூ.250, இப்போ ரூ.10.. எங்க ஆட்சியில் அசத்திட்டோம்ல.. மோடி பேச்சு

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் 1 ஜிபி டேட்டா ரூ 250, இப்போது ரூ 10- மோடி பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் 1 ஜிபி நெட் டேட்டாவின் விலை ரூ 250 ஆக இருந்தது. ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் ரூ 10 ஆக இருக்கிறது என பிரதமர் நரேந்திட மோடி நாடாளுமன்றத்தில் பேசினார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 1ஆம் தேதி 2023- 2024 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த பட்ஜெட் கூட்டத் தொடர்களில் அதானி விவகாரம் புயலை கிளப்பியது. அதானி குழுமம் குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதனால் நாள்தோறும் அவையில் கூச்சல் , குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு 13 மடங்கு அதிகரித்துவிட்டது என்றார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

எதிர்க்கட்சிகள் அமளி

எதிர்க்கட்சிகள் அமளி

அப்போது எதிர்க்கட்சிகள் அதானி அதானி என முழக்கமிட்டன. பதிலுக்கு ஆளும் கட்சியினர் மோடி மோடி என முழக்கமிட்டனர். இதனால் அவையில் குழப்பம் நிலவியது. பின்னர் பிரதமர் மோடி தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசுகையில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஒரு ஜிபி டேட்டாவின் விலை ரூ 250 ஆக இருந்தது.

1 ஜிபி டேட்டா

1 ஜிபி டேட்டா

ஆனால் தற்போது 1 ஜிபி டேட்டாவின் விலை ரூ 10 ஆக உள்ளது. சராசரியாக இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு தலா 20 ஜிபி டேட்டாக்களை பயன்படுத்துகிறார்கள். தற்போது அவர்களுக்கு மாதம் ரூ 5000 மிச்சமாகிறது. ஒவ்வொரு நடுத்தர மக்களின் கனவு ஒரு வீடு வாங்குவதாக இருக்கும். அது போல் தனது குழந்தையை மருத்துவராகவோ என்ஜினியராகவோ ஆக்க வேண்டும் என்ற கனவு, லட்சியம் இருக்கும். அதை நாங்கள் தற்போது மெய்பித்து காட்டியுள்ளோம். எங்கள் ஆட்சி காலத்தில் அனைத்தையும் சாத்தியப்படுத்தியுள்ளோம்.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு

டிஜிட்டல் உள்கட்டமைப்பு

இந்தியாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வேகமாக முன்னேற்றங்களை செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவை உலகமே உற்று நோக்குகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அடிப்படையான தொழில்நுட்பங்களை கூட பயன்படுத்த போராடிய காலம் எல்லாம் நம் நாட்டில் இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் எல்லாருக்கும் சாத்தியமே. இந்திய பொருளாதாரம் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு கடும் பாதிப்பை சந்தித்திருந்தது.

10 ஆண்டுகள் ஊழல் நிறைந்த காலம்

10 ஆண்டுகள் ஊழல் நிறைந்த காலம்

இந்த பத்தாண்டுகளை இந்தியா இழந்துவிட்டது என சொல்லலாம். அது போல் பணவீக்கமும் நீண்ட காலத்திற்கு இரட்டை இலக்கத்தில் இருந்தது. அத்துடன் பயங்கரவாத தாக்குதல்களும் நடந்தன. அந்த 10 ஆண்டு காலகட்டத்தில் மக்களுக்கு ஏதேனும் நன்மை நடந்தால், அதை விட தீமைகள் அதிகரித்திருந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்த வரலாற்றில் 2004 - 2014 ஆம் ஆண்டு வரை முற்றிலும் ஊழல்கள் நிறைந்த காலமாக இருந்தது. நிறைய சட்டங்களை காங்கிரஸ் அரசு நிறைவேற்றினார்கள். ஆனால் அவற்றை முறையாக அமல்படுத்தவில்லை என பிரதமர் மோடி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+