உச்சமடையும் உக்ரைன் போர்.. ரஷ்ய அதிபர் புதின் உடன் பேசிய பிரதமர் மோடி! என்ன காரணம்
டெல்லி: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வழியாக உரையாடினார்.
உக்ரைன் நாட்டில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போர் 6 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. இரு தரப்பு நாடுகளுக்கும் இடையே பெலராஸ் எல்லையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் பெரியளவில் உடன்பாடு எட்டப்படவில்லை.
தற்போது முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்தும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ளவர்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக அனைத்து இந்தியர்களும் இன்றிரவு 9.30 மணிக்குள் (உக்ரைன் நேரப்படி மாலை 6) கார்கிவ் நகரில் இருந்தும் உடனடியாக இந்தியர்கள் வெளியேறும்படி தூதரகம் கேட்டுக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் ரயில் நிலையங்களில் இந்தியர்கள் குவிந்துள்ளனர். இருப்பினும், நாட்டைவிட்டு வெளியேற இயக்கப்படும் ரயில்களில் உக்ரைன் மக்களை மட்டுமே காவலர்கள் அனுமதிப்பதாகவும் இந்தியர்களை அனுமதிக்க மறுப்பதாகவும் தகவல் வெளியானது.
இது உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருந்தது. உக்ரைனின் நிலைமை குறித்தும், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் இருவரும் ஆலோசனை செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக கடந்த வாரம் தான் போர், தொடங்கிய சமயத்தில் ரஷ்ய அதிபர் புதின் தொலைப்பேசி வழியாகப் பிரதமர் மோடியைத் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலைமை குறித்து விவரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications