Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் அலுவலகத்தை மாற்றும் மோடி.. 50 ஆண்டு பாரம்பரிய சவுத் பிளாக்கிற்கு இன்று குட்பை.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 50 ஆண்டுகளாக பிரதமரின் அலுவலகமாக டெல்லியில் செயல்பட்டு வந்த சவுத் பிளாக்கை விட்டு பிரதமர் மோடி நாளை புதிய அலுவலகம் செல்கிறார். இந்த புதிய அலுவலகத்துக்கு சேவா தீர்த் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைத்து பணியை தொடங்க உள்ளார்.

சுதந்திரத்துக்கு பின்பு நம் நாடு அடைந்த வளர்ச்சிக்கு முக்கிய இடம் என்றால் டெல்லியின் ரெய்சினா ஹில் பகுதி தான். ஏனென்றால் இந்த ரெய்சினா ஹில் பகுதியில் தான் பிரதமர், மத்திய அமைச்சர்களின் அலுவலகம் அமைந்து இருந்தது.

pm-modi-office-shift-to-the-newly-constructed-seva-teerth-office-in-new-delhi-tomorrow

சவுத் பிளாக் எனும் கட்டடத்தில் பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு துறை அமைச்சகம், வெளியறவுத்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் செயல்பட்டது. நார்த் பிளாக் பகுதிில் நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், நேரடி வரி, மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தது.

சவுத் பிளாக் - நார்த் பிளாக்

இதனால் தான் இந்த ரெய்சினா ஹில் பகுதியில் உள்ள சவுத் பிளாக் மற்றும் நார்த் பிளாக் நம் நாட்டின் ஒவ்வொரு அசைவிலும் முக்கிய பங்காற்றி வந்தது. டெல்லியின் சவுத் பிளாக்கில் தான் பிரதமர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

புதிய அலுவலகம்

கடந்த 50 ஆண்டுகளாக இந்த சவுத் பிளாக் கட்டடத்தில் இருந்து தான் பல்வேறு பிரதமர்கள் நாட்டின் முக்கிய முடிவுகளை எடுத்தனர். இன்று அந்த கட்டத்தில் பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டத்தை நடத்த உள்ளார். அதன்பிறகு நாளை முதல் புதிய அலுவலகத்தில் பிரதமர் மோடி பணியாற்ற உள்ளார்.

‛சேவா தீர்த்’ என பெயர்

இதற்காக டெல்லியில் புதிதாக பிரதமர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு ‛சேவா தீர்த்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‛சேவா தீர்த்' கட்டடம் நாளை மதியம் திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த அலுவலகத்தை திறந்து வைத்து உள்ளே நுழைய உள்ளார்.

அதன்பிறகு அங்கிருந்து தான் பிரதமர் மோடி தனது அலுவல் பணிகளை மேற்கொள்ள உள்ளார் இந்த புதிய அலுவலகம் தற்போதைய சவுத் பிளாக் கட்டத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் தான் அமைந்துள்ளது.

என்னென்ன அலுவலகம்?

இந்த புதிய கட்டத்தில் பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகம் மற்றும் முக்கிய பிரமுகர்களை வரவேற்கும் இந்தியா ஹவுஸ் ஆகியவை அமைந்துள்ளன. அமைச்சரவை செயலகம் ஏற்கனவே சேவா தீர்த்த்-2 க்கும், சர்தார் படேல் பவனில் செயல்பட்டு வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகம் சேவா தீர்த்-3 க்கும் மாற்றப்பட்ட நிலையில் பிரதமர் மோடி நாளை அதிகார்ப்பூர்வமாக சேவா தீர்த் அலுவலகத்துக்குள் நுழைகிறார்.

பிரதமர் அலுவலக வரலாறு

டெல்லியில் சவுத் பிளாக் மற்றும் நார்த் பிளாக் என அழைக்கப்படும் கட்டிடங்கள் 1931ம் ஆண்டு கட்டப்பட்டன. சுதந்திர இந்தியாவில், பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கீழ் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் சவுத் பிளாக்கில் தான் நடைபெற்றது.

சவுத் பிளாக் கட்டடம் 1947ல் பிரதமர் செயலகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அதன்பிறகு 1964ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானபோது புதிய கட்டம் கட்டப்பட்டது. இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் அது இன்னும் விரிவுப்படுத்தப்பட்டது. பின்னர் 1977 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது இது 'பிரதமர் அலுவலகம்' என பெயரிடப்பட்டது.

வெறிச்சோடும் ராய்சினா ஹில்

அதன்பிறகு தொடர்ந்து 50 ஆண்டுகளாக சவுத் பிளாக்கில் பிரதமர் அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் இன்றுடன் விடைபெறுகிறது. பிரதமர் அலுவலகத்தை தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் அடுத்த சில வாரங்களில் சவுத் பிளாக்கை விட்டு வெவ்வேறு அலுவலகங்களுக்கு மாற்றப்பட உள்ளது.

இதன்மூலம் நம் நாட்டின் வளர்ச்சி உள்பட பல்வேறு விஷயங்களின் மையப்புள்ளியாக இருந்த ராய்சினா ஹில்லின் சவுத் பிளாக் இனி வெறிச்சோடும். முன்னதாக, நார்த் பிளாக் கட்டிடமும் ஏற்கனவே காலி செய்யப்பட்டு அதன் அமைச்சகங்கள் ‛கர்த்தவ்யா பாதை' அருகே உள்ள புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+