சனிக்கிழமையில் வந்த நல்ல செய்தி..இன்று அக்கவுண்டுக்கே வரும் 2000 ஆயிரம்! எப்படி தெரிந்து கொள்வது?
டெல்லி : மத்திய அரசின் சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை தலா 2000 ரூபாய் என மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடி நிதியை இன்று பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் நிகழ்சியில் 18வது தவணையாக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படும் நிலையில் இதன் மூலம் சுமார் ஒன்பதரை கோடி விவசாயிகள் பயனடைய உள்ளனர்.
பாஜக அரசு அமைந்த பிறகு பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளும், மானியம், நிதி உதவி உள்ளிட்டவையும் ஜன் தன் வங்கி கணக்குகள் மூலமாக நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

முன்னதாக தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 ரூபாயை நான்கு மாத இடைவெளியில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது.
இந்த பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி நேரடியாக தகுதியுள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வர வைக்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 17 தவணைகளாக விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் நிதி உதவி வரவு வைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 17ஆவது தவணை பிஎம் கிசான் நிதியை விடுவித்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பதினெட்டாவது தவணை நிதி உதவியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார். சுமார் 20000 கோடி நிதி விடுவிக்கப்படும் நிலையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இன்று மகாராஷ்டிரா மாநிலம் வாஷிமில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் தான் பதினெட்டாவது தவணையாக விவசாயிகளுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 9.4 கோடி விவசாயிகள் பயனுடைய உள்ளனர். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் மூன்று புள்ளி நான்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதா என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்வதற்காக அதிகாரப்பூர்வ இணையதளமும் இருக்கிறது. பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட்டதும் உங்கள் எண்ணுக்கு வங்கி தரப்பில் இருந்து குறுஞ்செய்தி வரும். இருந்த போதும் அந்தத் திட்டத்தின் கீழ் தான் உங்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய என்ற மத்திய அரசின் https://pmkisan.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.
அதன் ஹோம் பேஜில் 'கிசான் கார்னர்' என்ற பகுதியை கிளிக் செய்தால் பயனாளிகள் பட்டியல் இருக்கும். அதில் உங்கள் பெயர், திட்ட எண், தொலைபேசி, முகவரி, தாலுகா,மாவட்டம், மாநிலம் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து 'அறிக்கையை பெறவும்' என கிளிக் செய்தால் நீங்கள் அந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளீர்களா என செய்தி கிடைக்கும்.












Click it and Unblock the Notifications