USISPF தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் மோடி நாளை சிறப்புரை
டெல்லி: அமெரிக்கா- இந்தியா திட்டமிடல் மற்றும் பங்களிப்பு அமைப்பின் (USISPF) 3-வது தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் மோடி நாளை (செப்.3) சிறப்புரையாற்ற உள்ளார்.
அமெரிக்கா- இந்தியா இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் USISPF செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது.
ஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு.. 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ செல்கிறார் ராஜ்நாத்சிங்
திங்கள்கிழமையன்று நடைபெற்ற மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமையன்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த அமைப்பின் 3வது தலைமைத்துவ மாநாட்டில் நாளை பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த மாநாட்டில் இருநாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Comments
English summary
Prime Minister Narendra Modi will deliver key note address to the third leadership summit of US India Strategic and Partnership Forum on Thursday.